world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. ரஷ்யா கைப்பற்றியுள்ள மரியபோல் நகரில் ஒரு  இரும்பாலையில் தஞ்சமடைந்த உக்ரைன் வீரர்கள்  மற்றும் நாஜிக்கள் அனைவரும்  சரண் அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சரணடையும் முடிவை முதலிலேயே எடுத்திருந்தால் நூற்றுக் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.  
  2. உக்ரைனுக்கு அமெரிக்கா செய்யும் உதவி ஒருவித  சட்ட விரோத நிதி சுழற்சி போல உள்ளது எனவும் இப்பொழுது செய்யும் உதவியை முன்வைத்து பின்னால் ஆட்சியாளர்களின் குடும்பத்தினரின் நிறு வனங்கள் பெரும் பணம் ஈட்ட திட்டமிடப்படுகிறது எனவும் அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர் டெய்லர் கிரீன் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
  3. தான் உக்ரைன் மக்களுக்கு உதவி செய்ய வந்ததாக வும் தன்னை ஏமாற்றி போர்முனைக்கு அனுப்பிவிட்ட னர் எனவும் பிரிட்டன் பிளைமவுத் நகரிலிருந்து வந்த  ஆண்டிரூ பரிதாபகரமாக பேட்டி அளித்துள்  ளார். இவர் ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.
  4. உக்ரைன் தனது ஊழியர்களுக்கு ஊதியம் தரவும் மறுநிர்மாணத்துக்கும் ஐரோப்பா உதவ வேண்டும்  என அமெரிக்கா நிதி அமைச்சர் ஜேனட் யெல்லென் கூறியுள்ளார். ஐரோப்பிய அரசுகள் செவிசாய்க்குமா? உக்ரைன் தமது பலி ஆடு என மேற்கத்திய  நாடு கள் நினைக்கின்றன என ரஷ்ய  வெளியுறவு அமைச்சர் லவ்ரவ் கூறியுள்ளார்.
  5. உக்ரைனில் உள்ள கோதுமை முழுவதையும் பறித்துக் கொள்ள ஐரோப்பா திட்டமிடுவது  உக்ரைன் மக்களை பட்டினி போட வைக்கும் என ரஷ்ய நாடாளுமன்ற தலைவர் எச்சரித்துள்ளார். உக்ரைனை அந்நாட்டு மக்கள் கட்டுப்படுத்த வில்லை; பிரிட்டனும் அமெரிக்காவும் கட்டுப்படுத்து கின்றன என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
  6. உலக வர்த்தக அமைப்பிலிருந்தும் உலக சுகாதார  அமைப்பிலிருந்தும் வெளியேற ரஷ்யா ஆலோசித்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. ரஷ்ய எண்ணெய்க்கு ஒரு புறம் மேற்கத்திய நாடுகள்  தடைகள் விதிக்க மறுபுறம் இந்தியா ரஷ்ய எண்ணெய்யை கொள்முதல் செய்வது அதிகரித்து வருகிறது.
  7. ரஷ்யா மீதான தடைகள் காரணமாக இத்தாலி யின் 70% பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப் பட்டுள்ள தாக இத்தாலி தேசிய புள்ளி விவர மையம் தெரிவித்துள்ளது.