world

img

ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் விழுந்து நொறுங்கியது

லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரஷியாவின் லூனா-25 விண்கலம் சோயுஸ் ராக்கெட் மூலம் கடந்த 10-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென் துருவத்தில் அந்த விண்கலத்தை தரையிறக்கி அங்கிருக்கும் கனிம வளங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை தரையிறங்கவிருந்த லூனா 25 விண்கலம் நிலவில் விழ்ந்து நொறுங்கியதாக ரஷிய வின்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. லூனா 25 விண்கலம் தொடர்பை இழந்த நிலையில் இணைப்பை ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் பயனிளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தொடர்பை இழந்த நிலையில் நிலவில் விழுந்து நொறுங்கியுள்ளது.

ரஷியா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ள நிலையில், வருகிற ஆக.23-ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விகரம் லேண்டர் நிலவில் தரையிறங்குகிறது.ரஷிய விண்கலம் தரையிறக்குவது தோல்வியில் முடிந்ததால். நிலவின் தென் துருவத்தில் விண்கலம் தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற இருக்கிறது.