ஏதென்ஸ், ஏப்.3- ரஷ்யா- உக்ரைன் மோதலைக் கார ணம் காட்டி ஒட்டுமொத்த ஐரோப்பியக் கண்டத்தையே ராணுவ மயமாக்கும் அமெரிக்காவின் முயற்சிகளுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரை னைத் தூண்டிவிட்டு, தற்போது தாக்கு தலைத் தடுக்க எதுவும் செய்யலா மல் அமெரிக்கா கைவிட்டு விட்டது. ஆனால், தனது ஆயுத விற்பனை யைப் பெரும் அளவில் அதிகரித்துள் ளது. பல ஐரோப்பிய நாடுகள் ஆயு தங்களை வாங்கிக் குவித்து வரு கின்றன. அமெரிக்காவின் ஆயுத வியா பாரம் களைகட்டிவிட்டது. அதோடு, புதிதாகத் தனது முகாம்களையும் அமெ ரிக்கா அமைத்து வருகிறது. பல ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயு தந்தாங்கிய வண்டிகள் செல்கின்றன.
கிரீசின் அலெக்சாண்ட்ரோபோலிஸ் துறைமுகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற் றும் அதன் நேட்டோ கூட்டாளிகள் இந் தத் துறைமுகத்தில்தான் தங்கள் ஆயு தங்களை இறக்குகின்றன. இங்கிருந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு வண்டிகளில் ஆயுதங்களை நிரப்பப் பட்டு அனுப்பப்படுகின்றன. சாலை வழியாகவும், புகைவண்டி கள் மூலமாகவும் இவை செல்கின்றன. குறிப்பாக, ருமேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளை நோக்கி இந்த ஆயு தந்தாங்கிய வாகனங்கள் விரை கின்றன.
இவ்வாறு ஆயுதமயமாக்க லுக்கு தங்கள் நாட்டின் வழியாக வாக னங்களை எடுத்துச் செல்வதற்கு கிரீஸ் நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கி றது. அந்த வாகனங்கள் செல்லும் பாதை யில் கூடி நின்று, சிவப்பு வண்ணத்தை எறிந்து கம்யூனிஸ்ட் கட்சியினரும், ஆத ரவாளர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரி வித்துள்ளார்கள். ஐரோப்பிய மக்கள் மீதான தாக்குத லைத் தொடுக்க கிரீசின் துறைமுகம் மேடையாகப் பயன்படுத்துவதைத் தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாக கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித் துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மோத லைக் குறைக்க எதுவும் செய்யாமல் படைகளையும், ஆயுதங்களையும் குவிப்பதால் அபாயம் அதிகரிக்கவே செய்கிறது என்று குற்றம் சாட்டி யுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, அதைத்தான் அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் விரும்புகின்றன என்று சுட்டிக்காட்டி யுள்ளது.