world

img

ஸ்காட் மோரிசனின் ‘முயற்சி’ பலிக்கவில்லை உக்ரைன் - ரஷ்ய விவகாரத்தை பேசாமல் தவிர்த்த மோடி!

புதுதில்லி, மார்ச் 22 - உக்ரைன் - ரஷ்யா இடையிலான பிரச்சனையில், ரஷ்யாவிற்கு எதிரான நிலைபாட்டை இந்தியா எடுக்க வேண்டும் என்பது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் ஆசை யாகும். இந்தியா அதற்கு இணங்க மறுத்தும், தங்களின் முயற்சியை அவர்கள் விடுவதாக இல்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப் பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘குவாட்’ நாடுகள் ராணுவக் கூட்ட மைப்பில் இந்தியாவும் ஒரு அங்கம் என்பதால், இந்த ‘குவாட்’ அமைப்பு மூலமாகவும், இந்தியாவை ரஷ்யா வுக்கு எதிராக நிறுத்த முயற்சி நடக்கி றது. இதற்கிடையேதான், இந்தியா விற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடை யிலான வருடாந்திர உச்சி மாநாடு திங்க ளன்று  காணொலிக் காட்சி மூலம் நடை பெற்றது.  இதில், பிரதமர் மோடியும் ஆஸ்தி ரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் நிலை, குவாட் நாடுகளின் ஒத்துழைப்பு ஆகி யவை குறித்து விவாதித்தனர்.

அப்போது, ஸ்காட் மோரிசன் பேசு கையில், “உக்ரைனில் நடப்பது போன்ற நிகழ்வுகள் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஒருபோதும் நடக்கக் கூடாது” என்றும், “ஐரோப்பா வில் நிலவும் சூழலால் நாங்கள் துய ரத்திலும் கவலையிலும் உள்ளோம்” என்றும் உருக்கம் காட்டினார்.  தொடர்ந்து பேசிய அவர், “ஒரு மித்த எண்ணம் கொண்ட ஜனநாயக நாடுகளுக்கு இடையே கூடுதல் ஒத்து ழைப்பு தேவை; ‘குவாட்’ நாடுகளுக்கு இந்தியா தலைமைத்துவம் வகிக்க வேண்டும்” என பிரதமர் நரேந்திர மோடியை அவர் வலியுறுத்தினார்.  ஆனால், மாநாட்டில் உரை யாற்றிய பிரதமர் மோடி, உக்ரைனில் ரஷ்ய ராணுவத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து,  எந்தக் கருத்தையும் வெளிப்படுத்த வில்லை. இந்தோ-பசிபிக் பகுதியில் ‘குவாட்’ கூட்டமைப்பின் ஒத்து ழைப்பை வலியுறுத்துவதாக மட்டுமே அவரது பேச்சு அமைந்தது. இதன்மூலம் உக்ரைன் விவ காரத்தில், ரஷ்யாவுக்கு எதிரான வார்த்தைகளை இந்தியாவிடமிருந்து பெற வேண்டும் என்ற ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனின் முயற்சி பலனளிக்காமல் போனது.

 இதையே வேறொரு வகையில், “உக்ரைன் விவகாரத்தில் இந்தியா வின் நிலைப்பாட்டை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் புரிந்து கொண்டார்” என்று இந்திய வெளியு றவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா குறிப்பிட்டார். முன்னதாக மோடி - மோரிசன் சந்திப்பின் போது ‘கானிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட்’ (KABIL) மற்றும் ஆஸ்திரேலியாவின் முக்கிய கனிம வள நிறுவனம் ஒன்றிணைந்து ஆஸ்தி ரேலியாவில் “லித்தியம்” ஆய்வு செய் வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  இதுபற்றி வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறுகை யில், “இந்த ஒப்பந்தம், ஆஸ்திரேலியா வின் கனிமத் துறையில் முதலீடு செய்ய இந்தியாவை அனுமதிக்கும்” என்றார்.  “இந்தியா - ஆஸ்திரேலிய விரி வான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்” (India-Australia Comprehensive Economic Cooperation Agreement - CECA) முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மோடி, இந்த ஒப்பந்தத்தின் முடிவு இந்தியாவின் பொருளாதார உறவு, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்” என்றார்.  இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மேற்கு வங்கம் போன்ற இடங்களிலிருந்து “சட்ட விரோத மாக” எடுத்துச் செல்லப்பட்ட பழங் கால இந்திய கலைப் பொருட்க ளைத் திருப்பிக் கொடுத்த ஆஸ்தி ரேலியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.