world

img

அமெரிக்கப் படைகளைத் தூக்கி எறிவோம்

டமாஸ்கஸ், டிச.29- சிரியாவில் பல பகுதிகளை ஆக்கிர மித்துள்ள அமெரிக்கப் படைகளைத் தூக்கி எறிவது கைமீறிய வேலையில்லை என்று சிரியா தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராகப் போர் புரிகிறோம் என்று சொல்லிக் கொண்டு சிரியாவின் சில பகுதிகளை அமெரிக்க ராணு வம் ஆக்கிரமித்திருக்கிறது. இந்தப் பகுதி களில் எண்ணெய் வளம் அதிகமாக உள்ளது.  அந்த வளத்தைச் சுரண்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. சில தீவிரவாதக் குழுக் களுக்கு ஆதரவளித்து, ஆயுதங்களையும் வழங்கி அவர்களை சிரிய அரசுக்கு எதிராகப் போரிட வைத்துள்ளனர்.  மற்ற தீவிரவாதக்குழுக்களை ஒழித்துக்  கட்டிய சிரிய அரசு தற்போது அமெரிக்கா வின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கவனம்  செலுத்துகிறது. அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மக்களும் அமெரிக்கா வுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்துள்ளனர். இதைத் தெரிவித்துள்ள சிரியாவின் பாது காப்புத்துறை, “அந்நிய சக்திகளை ஆக்கிர மிப்பில் இருந்து வெளியேற்றுவது வெகு தொலைவில் உள்ளதாக எப்போதுமே உணரவில்லை” என்று கூறியுள்ளது. அந்நிய சக்திகளிடமிருந்து நாட்டை  முழுமையாக விடுவிக்கும் வாய்ப்பு அதி கரித்தே வருகிறது என்று குறிப்பிட்டுள்ள  பாதுகாப்புத்துறையின் செய்திக்குறிப்பு, “அந்த நேரம் விரைந்து வந்து கொண்டி ருக்கிறது” என்று தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளை விரட்டுவதாகக் கூறி, 2014 ஆம் ஆண்டில் சிரியாவிற்குள் நுழைந்த அமெரிக்க ராணுவம், எண்ணெய் வளம் உள்ள பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது. பயங்கரவாதிகளை சிரிய  ராணுவம் ஒடுக்கிய பிறகும், ஆக்கிர மிப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறா மல், அங்குள்ள எண்ணெய் வளத்தை அமெரிக்கா கொள்ளையடித்து வருகிறது.