world

உக்ரைன்- ரஷ்யா போர் களத்திலிருந்து...

*    உக்ரைனின் நிகயோனா எனும் நகரில் உள்ள மருத்துவமனையிலிருந்து அனைத்து நோயாளிகளையும் ஊழியர்களையும் அசோவ் பட்டாலியன் நாஜிப்படைகள் வெளியேற்றிவிட்டனர் எனவும் அந்த மருத்துவமனையில் கண்ணி வெடிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய விமானங்கள் இந்த மருத்துவமனை மீது பறக்கும் பொழுது மருத்துவமனையை தகர்த்து பழியை ரஷ்யா மீது போட இவ்வாறு செய்யப்படுகிறது. இதே போலவே மரியபோல் மருத்துவமனை மீதும் தாக்குதலை அசோவ் பட்டாலியன் செய்துவிட்டு அதனை ரஷ்யா மீது பழிபோட்டது நினைவிலிருக்கலாம்.

*    2015ம் ஆண்டு உக்ரைனின் “அசோவ் பட்டாலியனை” நாஜி அமைப்பு என நியூயார்க் டைம்ஸ் இதழ் வகைப்படுத்தியது. ஆனால் இப்பொழுது அவர்களை வலதுசாரி தேசியவாதிகள் என கூறுகிறது. நாஜிக்களிலிருந்து தேசியவாதிகளாக மாறுவதற்கு அசோவ் பட்டாலியன் விசேட பயிற்சி எடுத்ததா என்பதை நியூயார்க் டைம்ஸ் விளக்குமா?

*    விண்வெளியில் முதல் காலடி வைத்தவர் சோசலிச சோவியத் யூனியனின் யூரி ககாரின். இன்று விண்வெளி மாநாட்டில் “மனித குலத்தின்  வெற்றி” நிகழ்ச்சியில் ரஷ்யாவைப் பழிவாங்குவதாக எண்ணி யூரி ககாரின் பெயர் அகற்றப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் வன்மம் அளவற்றது.

*    உக்ரைனின் கீவ் நகரில் உள்ள நாஜி அசோவ் பட்டாலியன் மரியபோலில் உள்ள ரஷ்ய படைகளின் முற்றுகையை உடைக்க உக்ரைன் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பகிரங்கமாக வற்புறுத்தியுள்ளது. அது சாத்தியமற்றது எனவும் ஆபத்தானது எனவும் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் கூறியுள்ளார். உக்ரைன் ஜனாதிபதிக்கு அசோவ் பட்டலியன் மீது ஆளுமை உள்ளதா எனும் கேள்வி எழுந்துள்ளது. சூழல்கள் மாறினால் அசோவ் பட்டாலியன் ஜெலன்ஸ்கி மீது ஆபத்தை விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

*    தாங்கள் தருவதற்கு வாய்ப்புள்ள அனைத்து ஆயுதங்களையும் உக்ரைனுக்கு தந்துவிட்டதாகவும் இனி தருவதற்கு ஒன்றும் இல்லை எனவும் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். உக்ரைன் சிக்கலில் மாட்டுகிறதா?

*    அசோவ் கடற்பகுதியில் தங்களது பிடிமானம் முற்றிலும் போய்விட்டது எனவும் அது ரஷ்ய ராணுவத்தின் கைகளுக்கு சென்றுவிட்டது எனவும் உக்ரைனின் ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. இது உக்ரைனுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு ஆகும்.

*    உக்ரைன் போர் குறித்து மேற்கத்திய ஊடகங்கள் சொல்வதை அப்படியே இந்திய ஊடகங்களும் வாந்தி எடுக்கின்றன என முன்னாள் வெளியுறவு அதிகாரி பத்ரகுமார் விமர்சனம் செய்துள்ளார். மாஸ்கோவில் உள்ள தங்களது வசதிகள் மூலம் செய்திகளை பெற்று ஆய்வு செய்து வெளியிடுவதில் ஏன் இந்திய ஊடகங்கள் தவறுகின்றன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

*    ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சு வார்த்தைகளில் சில முன்னேற்றம் கண்டுள்ளதாக ரஷ்ய தூதுக்குழுவின் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் நேட்டோவில் சேராமல் நடுநிலை வகிப்பது/ உக்ரைன் ராணுவ திறன் ஆகியவை குறித்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன. ஆனால் உக்ரைனை நாஜிக்களின் பிடியிலிருந்து விடுவிப்பது குறித்தும் டோன்பாஸ் பகுதிகளுக்கு சுதந்திரம் குறித்தும் முன்னேற்றம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

*    உக்ரைன் பிரச்சனையை தீர்க்க அமெரிக்கா ரஷ்யாவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சீன ஜனாதிபதி ஜின்பிங் அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதே சமயம் ரஷ்யாவுடன் உள்ள உறவில் அமெரிக்காவின் எவ்வித நிர்ப்பந்தத்துக்கும் அடியபணிய மாட்டோம் எனவும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

*    பிரிட்டனிலிருந்து உக்ரைனுக்கு ஆதரவாக போரிட வந்த ஒருவர் 9மணி நேரத்தில் வெளியேறிவிட்டர். உக்ரைனில் நிரந்தரமாக போரிட ஒப்பந்தத்தில் கையெழுத்து கேட்கிறார்கள் எனவும் தங்களுக்கு தருவதற்கு போதுமான ஆயுதங்களும் உக்ரைனிடம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதே போலத்தான் பல வெளிநாட்டவரும் புகார் தெரிவிக்கின்றனர்.

*    உக்ரைன் அகதிகளை எடுத்துக் கொள்வதில் ஒரு எல்லைக்கோட்டுக்கு வந்துவிட்டதாகவும் இனி அவர்களை தமது தேசத்தில் அனுமதிக்க வாய்ப்பில்லை எனவும் செக் குடியரசு அறிவித்துள்ளது. இதே போல ஜெர்மனி உட்பட பல தேசங்களும் அறிவித்துள்ளன. உக்ரைன் மக்களின் நிலை வேதனை தரக்கூடியதாகவே உள்ளது. உக்ரைன் அரசாங்கம் இதனை உணருமா? விரைவில் ஒப்பந்தம் உருவாகுமா?

*    உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நேட்டோவுக்கு மின்சார அதிர்ச்சி போல எனவும் கிட்டத்தட்ட உறக்க நிலையில் இருந்த நேட்டோ இப்பொழுது புத்துப்பித்து கொண்டுள்ளது எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரான் கூறியுள்ளார்.

*    ரஷ்ய படைகளால் விடுவிக்கபப்ட்ட பல உக்ரைன் நகரங்களுக்கு ரஷ்யா நிவாரண உதவிகளையும் உணவு பொருட்களையும் கொடுத்து வருகிறது. இது வரை சுமார் 600 டன் உணவுப்பொருட்கள் தரப்பட்டுள்ளன.

*    உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள டேனிலோ ஹலிட்ஸ்கி எனும் சர்வதேச விமான நிலையத்தை ரஷ்ய ஏவுகணைகள் சரமாரியாக தாக்கியுள்ளன. இந்த விமான நிலையம் மூலமாகத்தான் மேற்கத்திய தேசங்களின் ஆயுதங்கள் உக்ரைனுக்குள் வருகின்றன.

*    உக்ரைனின் மேற்கு பகுதியில் முதல்முறையாக உக்ரைன் படைகள் ரஷ்ய படைகள் மீது எதிர்தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் ரஷ்ய படைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் விவரங்கள் வெளியிடப்படவில்லை.