world

img

ரஷ்யா-உக்ரைன் போர் களத்தில் இருந்து...

உக்ரைன் அரசாங்கம் தொடர்ந்து செயல்படுவதற்கான மாற்று திட்டம் தங்களிடம் உள்ளதாக அமெரிக்க அமைச்சர் பிளிங்கன் தெரி வித்துள்ளார். அப்படியானால் ஜெலன்ஸ்கி போலந்துக்கு சென்று விட்டதும் அங்கிருந்து அயலக அரசாங்கம் நடத்துவார் எனவும் வரும் தகவல்கள் உண்மையா என பலரும் கேட்கின்றனர்.

ரஷ்யாவின் நிலையை ஆதரித்ததற்காக ஜிம்பாப்வே மீதும் அமெரிக்கா வர்த்தக தடைகளை சுமத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கும் தங்களுக்கும் உள்ள உறவு என்பது உலகின் மிக முக்கிய இருதரப்பு உறவு எனவும் அதில் மூன்றாவது நாடு தலை யிடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் சீனா வெளி யுறவு அமைச்சர் கூறி மேற்கத்திய நாடுகளுக்கு குட்டு வைத் துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிராக நிலைபாடு எடுக்குமாறு மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானை நிர்ப்பந்திக்கின்றன எனவும் அவர்களின் பேச்சை கேட்க பாகிஸ்தான் அவர்களின் அடிமை நாடு அல்ல எனவும் பிரத மர் இம்ரான்கான் காட்டமாக கூறியுள்ளார்.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடைவிதிப்பது தொடர்பாக அமெரிக்கா-ஐரோப்பாவுக்கு இடையே பேச்சு வார்த்தை நடக்கிறது.

கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 130 டாலராக உயர்ந்துள்ளது. பல நாடுகளின் பொருளாதாரம் பாதிப்புகளை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது. 

மேற்கத்திய நாடுகளின் வர்த்தக தடை காரணமாக எரி வாயு ஒரு டன்னுக்கு 3000 டாலர் எனவும் தாமிரம் ஒரு டன்னுக்கு 4000 டாலர் எனவும் வரலாறு காணாத உயர்வு. கடும் குளிர் காலம் நெருங்கு கிறது. மக்கள் என்ன செய்வார்கள் என பலரும் கவலை தெரி வித்துள்ளனர். 

உக்ரைனின் பெரும்பான்மையான போர் விமானங்களையும் அனைத்து விமான நிலையங்களையும் விமானப்படையின் தாக்கு தல் தளங்களையும் அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனவேதான் ஜெலன்ஸ்கி விமானங்களை தருமாறு நேட்டோவிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறார். 

எங்களது தேசம் உக்ரைனுக்கு விமானங்களையும் விமான தளங்களையும் கொடுக்க உள்ளதாக வரும் தகவல்கள் உண்மை  அல்ல என போலந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு விமானங்கள் தந்து உதவுமாறு போலந்தை அமெரிக்கா வற்புறுத்தி யது குறிப்பிடத்தக்கது. உக்ரைனுக்கு எல்லா பொருளாதார உதவி களையும் செய்வோம். ஆனால் ராணுவ உதவிகளை செய்ய மாட்டோம் என போலந்து கூறியுள்ளது.

மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை புகழ்ந்து  காணொலிகளை வெளியிடுமாறு தாங்கள் நிர்பந்தப்படுத்தப் பட்டதாக உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் புகார் கூறி யுள்ளனர். தங்களை தூதரகத்தின் கழிவறைகளை சுத்தம் செய்ய சொன்னதாகவும் சில மாணவிகள் பகீர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ரஷ்யாவில் பல இடங்களில் போருக்கு எதிராகவும் ஆதரவாக வும் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. போருக்கு எதிராக நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல ருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

ருமேனிய எல்லையில் மத்திய அமைச்சர் சிந்தியா இந்திய மாணவர்களை ஆசுவாசப்படுத்துவதற்கு பதிலாக மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார் என ருமேனிய மேயர் கூறியுள்ளார். ருமே னிய மக்கள் அளித்த உணவு உட்பட பல உதவிகளை தான் ஏற்பாடு செய்ததாகவும் பொய் சொன்னார் எனவும் மேயர் குற்றம்சாட்டி யுள்ளார்.

லுகான்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகளின் தாக்குதலில் ஒரு பெரிய எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து நாசமானது. 

ரஷ்யா இரண்டாவது முறையாக தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு கூறி வருகிறது.

ரஷ்ய மொழி பேசும் உக்ரைனின் லுகான்ஸ்க் பகுதி ராணுவம் 100 கி.மீ. தாங்கள் முன்னேறி இருப்பதாகவும் 60 கிராமங்களை உக்ரைன் படைகளிடமிருந்து விடுவித்து இருப்பதாகவும் கூறு கிறது.

ரஷ்யாவில் தனது இணையதள சேவையை நிறுத்த இயலாது எனவும் என் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைக்கப்பட்டாலொழிய எனது சுதந்திரத்தை இழக்கப்போவது இல்லை எனவும் அமெரிக்க பெரு முதலாளி எலான் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்காவில் பலரும் அவரை இதற்காக விமர்சித்து வருகின்றனர். 

உக்ரைனின் ராணுவமும் நாஜி அமைப்பான அசாவ் பட்டாலி யனும் இணைந்து கார்கிவ்வில் உள்ள ஒரு அணு உலையை தகர்த்து அந்த பழியை ரஷ்யா மீது போட திட்டமிட்டு வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என ரஷ்ய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

தனது எல்லைப் பகுதியில் உயிரி ஆயுதங்களை தயாரிக்கும் பணியை உக்ரைன் செய்து வந்ததாகவும் அதற்கு அமெரிக்கா ஆத ரவு அளித்தது எனவும் அது தொடர்பான ஆவணங்களை தமது ராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

மார்ச் 11ம் தேதியிலிருந்து மேற்கத்திய இணைய தொடர்புகளை துண்டித்துக் கொள்ள போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தனது சொந்த இணைய சேவை நிலைநாட்டப்படும் எனவும் ரஷ்ய மக்க ளும் வணிக நிறுவனங்களும் அதற்கு தயாராக இருக்குமாறும் ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது.

உக்ரைனின் வின்னிட்சியா எனும் ராணுவ விமானதளத்தை ரஷ்யா முற்றிலும் அழித்துவிட்டது. அந்த நகரின் மேயரும் இதனை உறுதிப்படுத்தினார். 

ஐரோப்பா நாடுகளுக்கு எரிவாயு தருவதை நிறுத்த நிர்ப்பந் திக்கப்பட்ட ரஷ்யா சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய அளவுக்கு எரிவாயு தர ஒப்பந்தம் போட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

செர்பியாவின் தலைநகரான பெல்கிரேடு மீது 1999ம் ஆண்டு தொடர்ச்சியாக 78 நாட்கள் அமெரிக்கா குண்டு மழை பொழிந்தது. அந்த நகரமே நாசமானது. இப்பொழுது அந்த நகர மக்கள் ரஷ்யாவை ஆதரித்து பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற பேரணியை நடத்தியுள்ளனர். பெல்கிரேடின் கோபம் இன்னும் கொழுந்துவிட்டு எரிகிறது போலும்!

தொகுப்பு: அன்வர் உசேன்