world

img

மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும்

மாஸ்க்கோ,நவ.2- ரஷ்யாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட  மேற்கு நாடுகள் விதிக்க இருக்கும் கூடுதல் தடைகளை எதிர் கொள்ள நாம் தயா ராக வேண்டும் என ஜனாதிபதி விளாடி மிர் புடின் தெரி வித்தார்.

பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்த அந்நாட்டு அரசாங்க கூட்டத்தில் உரையாற்றிய போது, “சமீப ஆண்டுகளில் மேற்கு நாடுகள் எண்ணற்ற பொருளாதாரத் தடைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் நடைமுறையில் அந்த தடைகள் மூலம் அவர்கள் தான்  சிக்கியுள்ளனர். மேற்கு நாடுகளின் தடைகள் தீவிரமடையும்; அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடைகள் மூலம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் இறுதியில், அவர்கள் தங்கள் சொந்தப் பொருளாதாரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மேற்கத்திய அரசியல்வாதிகள் ரஷ்யாவிற்கு திருப்புளி (screwdriver), ஊசிகள் உள்ளிட்ட சிறிய பொருட்களைக் கூட தடை செய்யும் செயலில் இறங்கியுள்ளனர். பொருளாதாரத் தடைகள் கைக்கொடுக்காவிட்டால், ரஷ்யாவின்  முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளைச் சிதைக்கும் நாசவேலைச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்றும் புடின் எச்சரித்தார்.