world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. மரியபோல் நகரில் ஒரு இரும்பாலையில் சிக்கியுள்ள உக்ரைன் படையினர்(பெரும்பாலும் நாஜிக்கள்) ரஷ்யா விடம் சரண் அடைய மறுக்கின்றனர். அதே சமயம் அமெரிக்கா/ ஐரோப்பிய ஒன்றியம்/போப் ஆண்டவர்/துருக்கி/சீனா/எலான் மஸ்க் ஆகியோரிடம் தங்களை பாதுகாக்குமாறு புலம்பி வருகின்றனர். துருக்கி அவர்களை வெளியே கொண்டு வந்து தனது தேசத்துக்கு அழைத்துச் செல்ல தயார் என அறிவித்துள்ளது.
  2. ரஷ்யா இன்னும் பதில்  தரவில்லை. உக்ரைன் நெருக்கடி மிகப்பெரிய உலக நெருக்கடியின் துவக்கமாக இருக்கும் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என ஆன்ட்றே சுஷ்ன்ஸ்டோவ் எனும் பத்திரிக்கை யாளர் கூறியுள்ளார்.
  3. லாத்வியாவில் உள்ள ரஷ்ய செஞ்சேனை நினைவுச் சின்ன த்தை அகற்ற அந்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதனை எதிர்த்து பலரும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
  4. “ரஷ்யர்களைக் கொல்வது எங்களுக்கு விளையாட்டில் ஈடுபடுவது போல” என ஒரு உக்ரைன் வீரர் பேட்டியில் கூறி யதை அமெரிக்காவின் சி.என்.என். ஊடகம் ஒளிபரப்பி யுள்ளது.  
  5. போரை நிறுத்த சில பகுதிகளை விட்டுக்கொடுக்குமாறு மேக்ரோன் கூறியதாக உக்ரைனின் ஜெலன்ஸ்கி தகவல் வெளியிட்டுள்ளார். ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் இதனை மறுத்துள்ளது. பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் நாட்டம் காட்டவில்லை என புடின் குற்றம் சாட்டியுள்ளார்.
  6. உக்ரைனின் அரசியல் சித்தாந்தம் “நாஜி மயமாகிவிட்டது” எனவும் ஐரோப்பாவின் விழுமியங்களுக்கு எதிரானது எனவும் எனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைப்பது ஆபத்தானது எனவும் ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் குலுஸ்கோ கூறியுள்ளார்.
  7. தடைகளுக்குப் பின்னரும் ரஷ்யாவின் எண்ணெய் வரு மானம் அதிகரித்த வண்ணம் உள்ளது. தடைகள் ரஷ்யாவின் எண்ணெய் வருமானத்தை பாதிப்பதாக தெரியவில்லை. ரஷ்யாவின் எண்ணெய்க்கு ரூபிள் தர மறுப்பதால் பல்கேரியாவுக்கு ரஷ்ய எண்ணெய் நிறுத்தப்பட்டுவிட்டது. இதன் காரணமாக பல்கேரியாவில் பல பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதுவே பல ஐரோப்பிய தேசங்களிலும் உள்ள நிலை.
  8. மின்சாரத்துக்கு பணம் தராததால் பின்லாந்துக்கு மின்சக்தி தருவதை ரஷ்யா நிறுத்திவிட்டது.