world

img

ரஷ்யாவில் ஆப்பிரிக்கத் தலைவர்கள் வர்த்தக மேம்பாடு பற்றி ஆலோசனை

மாஸ்கோ, ஜூலை 28- ரஷ்யா-ஆப்பிரிக்கா இரண்டா வது உச்சி மாநாடு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நாடுகளுக்கிடையில் முதல் மாநாடு 2019 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சோச்சியில் நடை பெற்றது.  உலகின் தென்பகுதி நாடு களின் வளர்ச்சி பற்றி அந்த  மாநாட்டில் பேசப்பட்டது. அதே தான் தற்போதும் விவாதப் பொரு ளாக இருக்கப்  போகிறது. அந்த வளர்ச்சியில் ரஷ்யா மற்றும் ஆப்பி ரிக்க நாடுகளுக்கு இடையிலான உறவு எத்தகைய பாத்திரத்தை வகிக்கும் என்றும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெறும் இரண்டாவது மாநாட்டில் 40 ஆப்பிரிக்க நாடு களில் இருந்து பிரதிநிதிகள் பங்கே ற்றுள்ளனர். 17 நாடுகளின் ஜனாதிபதிகள் அல்லது பிரதமர்களும் பங்கேற்க விருப்பதால் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் தாமதம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான மோதல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநாடு பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் ரஷ்யாவிடமிருந்து வரும் உணவு தானியங்களை நம்பியிருக் கிறார்கள். 2020 ஆம் ஆண்டில் மட்டும் எகிப்து, சூடான், நைஜீ ரியா, தான்சானியா, அல்ஜீரியா, கென்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் மட்டும் 400 கோடி அமெரிக்க டாலர் செலவு செய்து இந்த உணவு தானியங்களை இறக்குமதி செய்துள்ளன. ஒருங்கி ணைந்த வர்த்தக மையம் இந்தப் புள்ளிவிபரத்தை வெளியிட்டி ருக்கிறது. அங்கோலா உள்ளிட்ட சில நாடுகள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதைத் தாண்டி பல்வேறு அம்சங்களைப் பேசவுள்ளன. மாநாட்டிற்குப் பிறகும் ரஷ்யாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த வர்களுடன் பேசுவதற்கான நேர த்தை அங்கோலாவின் வெளியுற வுத்துறை அமைச்சர் டெடி  அன்டோனியோ வாங்கியிருக் கிறார். பல்வேறு உடன்பாடு களில் இருதரப்பும் கையெழுத்திட விருக்கிறார்கள்.

புடின் உறுதி

உக்ரைனுடன் போடப்பட்டி ருந்த உடன்பாடு நிறைவு பெற்ற  போதிலும், ரஷ்யாவால் போதிய உணவு தானியங்களைத் தர முடி யும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்திருக் கிறார். அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் பர்கினோ ஃபசோ, ஜிம்பாப்வே, மாலி, சோமா லியா, எரிட்ரியா மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆகிய ஆறு நாடுகளுக்கு 50 ஆயிரம் டன் உணவு தானிய உதவியை மேற்கொள்ளப்போவதாக மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார். இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள தென் ஆப்பிரிக்காவும், மாநா ட்டை நடத்துகின்ற ரஷ்யாவும் பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்றி ருக்கின்றன. அந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆகஸ்டு 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை யில் நடைபெறவுள்ளனது. அந்த மாநாட்டிலும் இந்தக் கூட்டத்தின் முடிவுகளை விளக்கி, அடுத்த கட்டத் திற்கு எடுத்துச் செல்லப் போவ தாக ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கத் தரப்பினர் தெரி வித்திருக்கிறார்கள்.