பிரேசிலின் வடகிழக்கு மகாணமான பெர்னாம்புகோவில் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
கனமழை காரணமாக நிலச்சரிவு போன்ற சம்பவங்களிலிதுவரை 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும், 4000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாணத் தலைநகர் ரிகைஃப் எல்லை அருகே சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 19 பேர் பலியாகினர். இது தவிர, மேலும் இரு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், இந்த வாரமும் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேரும், நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெர்னாம்புகோவில் மட்டும் இந்த கனமழைக்கு 30 பேர் பலியாகியுள்ளனர்.