பிரேசிலியா, ஜூலை 12- நேரடியாக டீசலை ரஷ்யாவிட மிருந்து வாங்குவது தொடர்பான உடன்பாட்டை எட்டப்போவதாக பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானாரோ அறிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பே இதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுடன் போல்சானாரோ பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதற்கான சாத் தியக்கூறுகள் பற்றி அந்தப் பேச்சு வார்த்தையில் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. இது குறித்து போல்சானாரோ, “இன்னும் 60 நாட்களில் ரஷ்யாவிடமிருந்து டீசல் நமக்கு வந்து சேரும். இதற்கான வாய்ப்பு ஏற்கனவே உருவாகி விட்டது. ரஷ்யா எல்லாருடனும் வர்த்தகத்தை மேற்கொண்டு வரு கிறது. அதன் மீது போடப்பட்ட தடை கள் எதுவும் எடுபடவில்லை” என்று குறிப்பிட்டார். தனது டீசல் தேவையில் 30 விழுக்காட்டை பிரேசில் இறக்கு மதி செய்கிறது. இப்போதைய நிலையில் யாரிடமிருந்து வாங்கு கிறோம் என்பது முக்கியமில்லை. யார் குறைவான விலைக்குக் கொடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.