வகாடுகு,அக்.27- இப்ராஹிம் தரோர் தலைமையிலான புர்கினா பாசோ அரசு நாட்டின் சர்க்கரைத் துறையை அரசுடமையாக்கியுள்ளது.
ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான புர்கினோ பாசோ பிரான்ஸ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது அந்நாட்டின் இயற்கை வளங்களைச் சுரண்ட பல தனியார் நிறுவனங்கள் பிரான்ஸ் அரசால் உருவாக்கப்பட்டன. தற்போதும் அங்கு பல தொழிற்சாலைகள் பிரான்ஸ் நாட்டின் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவையாக உள்ளன.
தற்போது அந்நாட்டில் சக்கரைத்துறையைச் சார்ந்து இயங்கும் பிரான்ஸின் தனியார் நிறுவனங்கள் புர்கினோவில் விளையும் கரும்பு மற்றும் அதன் உபரிப் பொருட்களை பிரான்சுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.மேலும் அதை புர்கினா பாசோவில் அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்டி வந்தன.
பிரான்ஸ் அரசின் இந்த சுரண்டலால் புர்கினோ பாசோ அரசும் மக்களும் தொடர் வறுமையை மட்டுமே சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் தரோர் தலைமையிலான புர்கினா பாசோ அரசு சர்க்கரைத் துறையை அதிரடியாக அரசுடமை ஆக்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டு ராணுவ நடவடிக்கை மூலம் இப்ராஹீம் தரோர் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு இது போன்ற பல மக்கள் நல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.