பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகளை இஸ்ரேலிய ராணுவம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1,228 பாலஸ்தீன மக்களைக் கைது செய்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
பாலஸ்தீனத்தில் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய ராணுவம், அப்பாவி மக்களைக் கைது செய்து சிறைகளில் அடைத்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 11 பெண்களும், 165 சிறுவர்களும் அடங்குவர். நடப்பாண்டில் ஏப்ரல் மாதத்தில்தான் மிக அதிகமான அளவில் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து அப்பாவி மக்களை வெளியேற்றுகையில், தடுப்பவர்களை சிறைகளில் அடைப்பதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவி மக்களை வெளியேற்றுவதும் பெரும் அளவில் அதிகரித்ததால், கைதாகும் மக்களின் எண்ணிக்கையும் பெரும் அளவில் உயர்ந்துள்ளது.
இத்தனைக்கும் குற்றச்சாட்டுகளே சுமத்தப்படாமல் பலர் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறையில் உள்ள நிலைமையும் மோசமாகவே உள்ளது.