காசா, ஜூன் 9- நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூ ரமான தாக்குதலில் 210 பாலஸ்தீ னர்கள் கொல்லப்பட்டனர்.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் இனப்படுகொலை போரில் ஒரேநேரத்தில் 200க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர் தீவிரமாகியுள்ள சூழலில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு போரை நிறுத்த அமை திப் பேச்சுவார்த்தைக்கு ஐநா சபை மற்றும் பல நாடுகள் அழைப்பு விடுத்து வருகின்றன.
ஹமாஸ் அமைப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கும் போர் நிறுத்தத்திற்கும் தயார் எனவும் இஸ்ரேல் நடத்தி வரும் அனைத்து போர் நடவடிக்கைகளையும் நிறுத்தினால் முழு உடன்படிக் கைக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போர் நிறுத்தத்திற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.
4 பேரை மீட்க 210 பேரின் உயிர் பறிப்பு
ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்கிறோம் என கூறி இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து காசா பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், ஐ.நா நிவாரண முகாம்கள்,பள்ளிக் கூடங்கள் ஆகியவற்றின் மீது சர்வதேச போர் விதிமுறைகளை மீறி தொடர்ந்து மிக கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நுசிரத் அகதிகள் முகாமில் இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தி குழந்தைகள் பெண்கள் என சுமார் 210 பாலஸ்தீ னர்களை படுகொலை செய்துள் ளது. இந்த தாக்குதலும் கூட 4 இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்க நடத்தப்பட்டது என தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்ட 4 பணயக்கைதிகளின் புகைப்படங்களையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
சாப்பிடும் போது கொல்லப்பட்ட குழந்தைகள்
ஜூன் 8 அன்று இரவு இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் உணவு அருந்திக்கொண்டிருந்த குழந்தை கள் பலரும் கொடூரமான முறை யில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி தளங் களில் உணவை கையில் வைத்தி ருந்த நிலையில் கொல்லப்பட்ட குழந்தைகளின் காணொலிகள் வெளியாகி உலகையே உலுக்கி யுள்ளன. மேலும் கைகளும் கால்களையும் இழந்த நிலையில் குழந்தைகளும் சிறுவர்களும் துடிக்கின்ற காணொலிகளும் வெளியாகி பார்ப்பவர் மனதை உருக்குலையச் செய்துள்ளது.
முந்தைய தாக்குதல்கள்
இஸ்ரேல் காசா பகுதியில் போரைத் துவங்கியதில் இருந்து 36 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது. இதில் 15 ஆயி ரத்துக்கும் அதிகமானோர் குழந்தைகள்.
நுசிரத் அகதிகள் முகாம் தாக்கு தலுக்கு முன்பாக மிக மோசமான முறையில் மக்கள் மீது சில நேரடி தாக்குதல்களையும் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ளது. 2024 பிப்ரவரி மாதம் ரஃபா எல்லையில் உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும் குண்டுவீசியும் 100 க்கும் மேற் பட்ட பாலஸ்தீனர்களை படு கொலை செய்தது. அதேபோல மே 28 அன்று ரஃபா எல்லையில் கூடாரங்களில் தங்கியிருந்த பாலஸ்தீனர்கள் மீது குண்டு வீசி 14 குழந்தைகள் உட்பட 40 பேரை படுகொலை செய்தது. அல் ஷிபா உள்ளிட்ட மருத்துவமனை களுக்குள் சென்று கொடூரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஐ.நா கருப்பு பட்டியலில் இஸ்ரேல்
குழந்தைகள் மீதான வன் முறை, கொலை ஆகியவற்றை ஏவு வதன் காரணமாக இஸ்ரேலை ஐநா அவை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக ஐநா தூதர் கிலாட் எர்டானின் தெரிவித்துள் ளார். கடந்த வார இறுதியில் நுசிரத் முகாமின் ஐ.நா பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திய பிறகு ஐநா இந்த அறி விப்பை வெளியிட்டது. ஐ.நா அவை யின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் மீண்டும் நுசி ரத் முகாமில் தாக்குதல் நடத்தி 210 பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது இஸ்ரேல்.
போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இஸ்ரேலில் மாபெரும் போராட்டம்
இந்த தாக்குதலை தொடர்ந்து உலகம் முழுவதும் பாலஸ்தீனத் திற்கு ஆதரவாகவும் போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தியும் மக்கள் போராட்டங்களை துவங்கி யுள்ளனர். இங்கிலாந்து, ஸ்பெ யின், சுவீடன்,ஜோர்டான்,ஏமன், உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்க ணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் பல்லாயிரக்க ணக்கான மக்கள் ஒன்று கூடி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டும் எனவும், பணயக் கைதி களை மீட்டு வரவேண்டும் எனவும், நேதன்யாகு தலைமையிலான அமைச்சரவை பதவி விலக வேண்டும் எனவும் போராடி வரு கின்றனர்.
அமைதியான முறையில் போராடும் மக்களின் மீது தண்ணீர் பீரங்கிகள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தடியடி நடத்தியும் இஸ்ரேல் பாதுகாப்பதுப் படை விரட்டியுள்ளது. அதேபோல பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஒலிம்பிக் தலைமையகம் முன்பு கூடிய மக்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து இஸ்ரேல் நாட்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர்.