world

காசா மீது இஸ்ரேல் போர் : சில முக்கிய கள நிகழ்வுகள்

uமனித உயிர்களை துச்சமென மதிக்கும் வலதுசாரி இஸ்ரேல் அரசுக்கு எவ்வித எல்லைகளும் இல்லாமல் நிதி உதவியையும் ஆயுதங்களையும் பைடன் அரசாங்கம் வழங்குவது  ஏற்புடையது அல்ல என எலிசெபத் வாரன் எனும்அமெரிக்க முற்போக்கு செனட்டர்கூறியுள்ளார். 

uஅமெரிக்கா என்ன செய்தாலும் செங்கடல் வழியாக பயணிக்கும் இஸ்ரேல் கப்பல் எதுவும் தப்பாது; அதற்கு அனுமதிக்க மாட்டோம் என மீண்டும் ஏமனின் ஹவுதி அமைப்பு கூறியுள்ளது. 

uசுமார் 90 நாட்கள் போருக்கு பின்னரும் இஸ்ரேல் குண்டுவீச்சில் 22,000 பேர் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் ஹமாஸ் வலிமையாகவும் ஒன்றுபட்டும் உள்ளது என இஸ்ரேலின் முன்னாள் உளவுதுறை தலைவரும்ஹமாஸ் ஆய்வுநிபுணருமான கய் அவைடி கூறியுள்ளார்.

uஇஸ்ரேல்-பாலஸ்தீனிய போர் பெரும் போராக மாறும் ஆபத்து உள்ளது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் அச்சம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதமும் நிதியும் தரும் வரை இந்த ஆபத்து இருக்கத்தான் செய்யும் என்பதை அவர் அறியமாட்டாரா?

uஇரு நாட்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா ஏவிய62 ஏவுகணைகள்  Iron Dome எனப்படும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு கவசத்தை தாண்டி இலக்கை தாக்கியுள்ளன. இது மிகப்பெரிய ஆபத்து என இஸ்ரேலிய பத்திரிக்கைகள் அச்சம் தெரிவித்துள்ளன. லெபனானில் இஸ்ரேல் படுகொலை செய்த அல் அரோரியின் மரணத்துக்கு பதிலின் டிரெய்லர்தான் இந்த தாக்குதல் என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. 

uஇஸ்ரேலுடன் தனது உறவை சகஜமாக்கி கொள்ளும் நடவடிக்கையை சவூதி அரேபியா கை விடவில்லை என ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் அன்னலேபா பேர்பாக் கூறியுள்ளார். ஏமன் இஸ்ரேலுக்கு எதிராக ஏவும் ஏவுகணைகளை சவூதி தடுப்பதை நிரூபணமாக இவர் கூறுகிறார். சில அரேபிய நாடுகளின் ஊசலாட்டம்தான் பாலஸ்தீனத்துக்கு பெரும் தீங்கு என்பது வேதனையான ஒன்று. சவூதி மக்களில் 96% பேர் இஸ்ரேலுடன் தங்கள் அரசாங்கம் உறவை உருவாக்குவதை விரும்பவில்லை என்பதே தற்போதைய கடிவாளம் சவூதி அரசுக்கு!

uஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 குழந்தைகள் கை அல்லது கால்களை காசாவில் இழக்கின்றனர் என ஐ.நா.வின் யுனிசெஃப் வெளிப்படுத்தியுள்ளது. 

uமேற்கத்திய நாடுகளில் பேச்சு எழுத்துரிமை என்பது அரசின் கொள்கைகளை ஆதரிப்பது என ஆகியுள்ளது. இது  இஸ்ரேலிய – பாலஸ்தீனபோரில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இஸ்ரேலின் போர் கொலை வெறியை விமர்சிப்பது யூத மதத்தை விமர்சிப்பது என கருதப்படுவதாகவும் இதற்காக பலர் தமது வேலைகளையும் கல்வியையும் இழந்துள்ளதாகவும் டாம் ஃபவுடி எனும் பத்திரிக்கையாளர் கூறுகிறார். தனது நலன் பாதிக்கப்பட்டால் தான் தரும் ஜனநாயக உரிமைகளை முதலாளித்துவம் சிதைக்கும் என்பதற்கு இது மேலும் சான்று. 

uஇஸ்ரேலின் போர் அமைச்சரவையில் பேசப்படும் விஷயங்கள் வெளியே கசிவதால் அனைவருக்கு “உண்மை கண்டறியும் சோதனை” செய்யப்பட வேண்டும் என நேதன்யாகு ஆணையிட்டுள்ளார். இதன் விளைவாக சிலமுக்கிய அமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணிக்கின்றனர். இஸ்ரேலின் உள் நெருக்கடியை இது வெளிப்படுத்துகிறது.

uஇஸ்ரேலுக்கு எதிரான நிலையை பல அமெரிக்க தொழிற்சங்கங்கள் எடுத்து வருகின்றன. கீழ்மட்ட உறுப்பினர்களின் நிர்ப்பந்தத் தால் இந்த நிலை. அதே சமயத்தில் இஸ்ரேல் எதிர்ப்பில் உள்ளதொழிற்சங்கங்களுக்கு இன்னல்களும் தரப்படுகின்றன. 

uமியான்மர் அரசுக்கு எதிராக ரொகிங்கியா முஸ்லீம்களை இனப்படுகொலை செய்த வழக்கை பிரிட்டன் அரசாங்கம் சர்வதேச நீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. ஆனால் அதே பிரிட்டன் அரசாங்கம் இஸ்ரேலுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் வழக்கை ஆதரிக்க மறுக்கிறது. பிரிட்டனின் இரட்டை முகம். 

uகாசா பகுதியில் இஸ்ரேல் குண்டு வீச்சில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,084ஐ தாண்டியது. 59,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். 70% குழந்தைகளும் பெண்களும்! மேலும் 7000பேர் காணவில்லை.

uபாலஸ்தீன பிரச்சனையில் அரேபிய தேசங்களும் இஸ்லாமிய தேசங்களும் ஒற்றுமையில் லாமல் இருப்பதை துருக்கி நாடாளுமன்ற சபாநாயகர் விமர்சித்துள்ளார். நியாயமான விமர்சனம். எனினும் துருக்கி கூடஇன்னும் இஸ்ரேலுடன் வணிகத்தை தொடர்ந்து கொண்டுள்ளது என்பதும் உண்மை.  

uஇதுவரை காசா போருக்கு இஸ்ரேல் 60 பில்லியன் டாலர்களை அதாவது ரூ.5,10,000 கோடியை செலவு செய்துள்ளது. 

uஇஸ்ரேலுக்கு எதிராக போர் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தென் ஆப்பிரிக்காவுடன் பொலிவியாவும் இணைந்துள்ளது. 

uஇஸ்ரேல் குண்டுவீச்சு காரணமாக காசா பகுதிக்குள்ளேயே சுமார் 85% பாலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.