இஸ்லாமாபாத்,அக்,30- முறையான ஆவணமற்ற அகதிகள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விதித்திருந்த காலக்கெடு அக்,31 உடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவர்கள் தானாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் அரசே வெளியேற்ற துவங்கும் என பாகிஸ்தான் இடைக்கால அரசு மீண்டும் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற அக்டோபர் 31-ஆம் தேதி வரை கெடுவிதித்திருந்த நிலையில் 17 லட்சம் ஆப்கானிஸ்தா னியர்கள் உட்பட வெளியேறாத அகதிகளை நவம்பர் 1 முதல் இடைக்கால அரசே வெளியேற்றும் என உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் புக்டி திங்களன்று தெரிவித்தார்.