world

img

பாகிஸ்தானில், பத்திரிகையாளர் சுட்டு கொலை

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் பத்திரிகையாளரை, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாகி சுட்டு கொலை செய்தனர். 
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் லால்வானி (31). இவர் அங்குள்ள தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் , சுக்குர் பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடையில் அஜய் லால்வானி இருந்துள்ளார். அப்போது, இருசக்கரம் மற்றும் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் லால்வானியை துப்பாக்கியால் சுட்டனர். 
இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இச்சம்பவம் பத்திரிக்கையாளார்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் , பத்திரிக்கையாளர் லால்வானி கொல்லப்பட்ட்தற்கு உரிய விசாரணை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
 

;