பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கானில் உள்ள சோட்வான் காவல் நிலையத்தில் திங்கள் கிழமை அதிகாலை பயங்க ரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 க்கும் மேற்பட்ட காவலர்கள் படு கொலையாகியுள்ளனர். அந்நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் பிப்.8 அன்று நடைபெற உள்ள சூழலில் நாளுக்கு நாள் பதற்றங்கள் அதிகரித்து வரு கின்றன. கடந்த சில நாட்களாக கைபர் பக்துன்க்வா மற்றும்பலுசிஸ்தான் பகுதிகளில் தீவிர பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.