நியூயார்க், ஜூலை 14- இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொ ருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் போராட்டத்தால் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மாலத்தீவிற்கு தப்பிச்சென்றார். மாலத்தீவில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு செல்ல உள்ளார். அங்கு சென்றபின் தனது ராஜினாமாவை இலங்கை சபாநாயகருக்கு அனுப்பக்கூடும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக அவர் சிங்கப்பூரிலிருந்து சவுதி அரேபியா செல்ல உள்ளதாகஏபி செய்தி நிறு வனம் தெரிவித்துள்ளது இதற்கிடையில் இலங்கையின் இடைக் கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவை, கோத்தபய ராஜபக்சே நியமித்துள் ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகவேண்டுமென்று போராட்டம் தொடர்கிறது. இலங்கை பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற பிரதான சாலையில் பாதுகாப்புப் படையினரும் போராட்டக்காரர்களும் மோதிக் கொண்டனர். இதில் 84 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வன்முறை தொடர்வதால் வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை ஐந்து மணி வரை ஊரடங்கு நீடிக்கும் என இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கோத்தபய பதவி விலகாவிட்டால்...
இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, ராஜபக்சே தனது பதவியில் இருந்து விலகும ராஜினாமா கடிதத்தை விரை வில் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் அவரை பதவியில் இருந்து நீக்க வேறு வழிகளை பரிசீலிக்க நேரிடும் என்று வியாழக்கிழமை தெரி வித்தார்.
அன்டோனியோ குட்டரெஸ்
இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். “நான் இலங்கையின் நிலைமையைத் தொ டர்ந்து கவனித்து வருகிறேன். மோதலுக்கான அடிப்படைக் காரணங்கள் மற்றும் எதிர்ப்பாளர் களின் தேவைகளை பூர்த்தி செய்வது முக்கிய மானது. அமைதியான மற்றும் ஜனநாயக மாற்றத் திற்கான சமரச முயற்சிகளை ஏற்றுக்கொள்ளு மாறு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.” என தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.