ஜெனீவா, மார்ச் 17- மியான்மரில் பெரும் அளவிலான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோ கம் நடந்து வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மிஷேல் பேஷ்லெட் கருத்து தெரி வித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரி மைகள் கவுன்சிலின் 49வது கூட்டம் நடை பெறவுள்ளது. இதற்காக தயாரிக்கப் பட்டுள்ள அறிக்கையில் மியான்மர் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது குறித்துப் பேசிய மிஷேல் பேஷ்லெட், “திட்டமிட்ட வகையில் மியான்மர் ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது. இந்த மனித உரிமை மீறல்களின் பலவற்றை போர்க் குற்றங்கள் என்று கூட சொல்லலாம். மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை ராணுவம் மேற்கொண்டு வருகிறது” என்றார். தென்கிழக்கு ஆசிய நாடான மியான்ம ரில் நடக்கும் இந்தக் கொடூரங்களுக்கு எதி ராக சர்வதேச சமூகம் உடனடி நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், மனித உயிருக்கு எந்த வித மதிப்பும் தராமல் இந்த மியான்மர் நடந்து கொள்கி றது. பொது மக்களைக் குறிவைக்க போர் விமானங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு அவர்கள் இறங்கிவிட்டார்கள். பெரும் சேதத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களை ஏவு கிறார்கள் என்றார். மனித உரிமை மீறல்களால் கொல்லப் பட்டவர்களில் பலர் தலையில் சுடப்பட்டிருக் கிறார்கள். பலர் உயிரோடு கொளுத்தப்பட்ட னர். எந்தவிதக் காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் ளார்கள். கொடூரமாக சித்ரவதை செய்யப் பட்டிருக்கின்றனர். தாக்குதல்களின்போது மனிதக் கேடயங்களாக அப்பாவி மக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இத்தனைக் கும் பிறகு, மியான்மர் மக்கள் ஜனநாயகத் திற்கான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பிப்ரவரி 1, 2021 முதல் தற்போது வரை யில் நடந்த நிகழ்வுகள் குறித்து பல்வேறு பேட்டிகள் ஐ.நா.மனித உரிமை ஆணை யத்தால் எடுக்கப்பட்டன. சுமார் 1,600 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரம் தெரிய வந்துள்ளது. 12 ஆயிரத்து 500 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் தங்கள் வீடு களை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஆணையம் பட்டியலிட்டிருக்கிறது.