world

img

கொரோனா உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தவிர்க்கக்கூடியவையே! உலக சுகாதார நிறுவன தலைவர் பேச்சு

ஜெனீவா,செப்.11- கொரோனாவால் உயிரிழப்பு கள் தொடர்ந்து நிகழ்கின்றன. ஆனால் இவற்றில் பெரும் பாலான உயிரிழப்புகள் தவிர்க்கக் கூடியவையே என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறி யுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கொரோனா தொற்றும் உயிரிழப்புகளும் உலக அள வில் குறைந்து வருவது உண்மைதான். இது ஊக்கமளிக்கும் ஒரு விஷயம் என்றாலும் இதேநிலை தொடரும் என்பதற்கோ மீண்டும் தொற்று அதிகரிக்காது என்ப தற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கொரோனா வாராந்திர உயிரிழப்புகளின் எண்ணிக்கை 80 சதவீதம் வரை குறைந்துள்ளது. எனினும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னமும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலேயே உள்ளது. கடந்த வார அறிக்கையின்படி ஒவ்வொரு 44 வினாடிக்கும் உலகில் ஒருவர் கொரோனாவால் உயிரிழக்கின்றார்.  இந்த உயிரிழப்பு களில் பெரும்பாலானவை தவிர்க்கக் கூடியவையே. கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த வைரஸ் எளிதில் மறைந்துவிடாது. கொரோனா தொற்று தொடர்பாக 6 கொள்கை அறிவிப்புகளை உலக சுகாதார நிறுவனம் அடுத்த வாரம் வெளி யிடவுள்ளது. உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதில் விரிவாக விளக்கப்படும். பொதுவாக தொற்று அதிகரிக்கவே செய்யும் என்பதால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொரு நாடும் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

;