world

img

கொரோனா உலக சுகாதார மையம் எச்சரிக்கை

ஜெனீவா,மார்ச் 20- இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.  சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி யுள்ளது.  இந்த நிலையில், கொரோனா தொற்று குறித்து மக்களிடையே தவறான தகவல்கள் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து உலக  சுகாதார மையத்தின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப  தலைமை அதிகாரி மரியா வான் கெர்கோவ் கூறுகை யில், ஒமைக்ரான் திரிபு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பது தவறான தகவல். கொரோனா பரவல் முடிந்துவிட்டது என்பது தவறான தகவல். ஒமைக்ரான் தான் கடைசி திரிபு என்பது தவறான தகவல், அடுத்தடுத்த திரிபுகள் வரலாம்.  கொரோனா குறித்த தவறான எண்ணங்கள், மக்களிடையே நிறைய குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதில் மக்கள் கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது. முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.