world

img

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை

டோக்கியோ, ஜூலை 8- ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67) ஜூலை 8 வெள்ளியன்று சுட்டுக்கொல்லப் பட்டார்.  ஜப்பான் நாடாளுமன்ற மேலவை  தேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை யன்று  நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நடைபெற்றுக்கொண்டி ருக்கிறது.  ஜப்பானின் மேற்குப் பகுதி யில் உள்ள நரா நகரில் ஜூலை 8 வெள்ளியன்று காலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரத மர் ஷின்சோ அபே பேசிக் கொண்டி ருந்தார். அப்போது கூட்டத்தில் சாம்பல் நிற உடை அணிந்து கொண்டு நின்ற யமகாகி என்ற  நபர், ஷின்சோ அபேவை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார்.  அபேவின் பின்னால் நின்றி ருந்த நபர் தான் அவரை துப்பாக்கி யால் சுட்டார்.  உடனே காவல்துறை யினர்  அவரை மடக்கிப்பிடித்தனர். ஷின்சோ அபேயின் கழுத்தில் இருந்து ரத்தம் வந்து கொண்டி ருந்தது என்று  சம்பவத்தை நேரில் பார்த்த இளம்பெண் ஒருவர் செய்தி யாளரிடம் கூறினார்.  மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட ஷின்சோ அபேவிற்கு  மருத்து வர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் அபே வுக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில்  ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ஷின்சோ அபே ஜப்பான் பிரதம ராக நீண்டகாலம் இருந்தவர். 2006  ஆம் ஆண்டு அவர் பிரதமரானார். ஓராண்டு மட்டுமே பதவி  வகித்தார்.  பின்னர் 2012 ஆம் ஆண்டு  முதல் 2020 ஆம் ஆண்டு வரை 8  ஆண்டுகள் அவர் தொடர்ந்து பிரதம ராக இருந்தார். கடந்த 2020 ஆகஸ் ட்டில்  உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். உலகிலேயே மிகக் கடுமையான துப்பாக்கி பயன்பாட்டுச் சட்டம் ஜப்பான் நாட்டில் அமலில் உள்ள தாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருப்பது  அந்நாட்டு ஆட்சியாளர்கள், பொதுமக்கள் மத்தி யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு ஒன்றை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. ஷின்சோ அபே மறைவுக்கு இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி இரங்கல் தெரி வித்துள்ளார்.  ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்ற  நபரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷின்சோ அபேவின் செயல்களால் அதிருப்தி அடைந்ததால், அவரை கொல்ல முடிவெடுத்து சுட்டுக்கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.