world

img

பரப்புரை துவக்கம்

டோக்கியோ, மே 19- ஜூலை மாதத்தில் ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன.  அனைத்துக் கட்சிகளும் தங்கள் பரப்புரையைத் தொடங்கியுள்ளன. பொருளாதார மந்த நிலை முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கவனத்தைச் செலுத்தி வரும் வேளையில், மக்களை நேரடியாகச் சந்திப்பதில் கூடுதல் கவனத்தை ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி காட்டுகிறது. தங்கள் வாக்குறுதிகளை சுவரொட்டிகள் மூலமாக மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். சுவரொட்டிகளை ஒட்டும் நிகழ்வை கட்சியின் செயற்குழுத் தலைவர் கோய்கே அகிரா தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மக்களிடம் கூடுதல் நெருக்கத்தை உருவாக்கிக் கொள்ளுமாறு கட்சியின் ஊழியர்களை வலியுறுத்தினார். 

;