சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே நடக்கும் மோதல் காரணமாக அங்கே இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். 1800 பேர் காயமடைந்துள்ளனர்.
.சூடான் ராணுவத் தளபதி அப்தல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும் துணை ராணுவப் படை தளபதி முகமது ஹம்தான் டக்ளோவுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் இந்தக் கலவரத்திற்கு காரணம்.
சூடானின் தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக துணை ராணுவ படை அறிவித்தது
இதனால் சூடான் ராணுவத்திற்கும் ,துணை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற கடும் மோதலில் ஏற்பட்ட கலவரத்தில் இந்தியர் உட்பட 56 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் இதுவரை இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். 1800 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், கலவரக்காரர்கள் மருத்துவமனைகள் சூறையாடியதால் மருந்து தட்டுப்பாடும் நிலவுகிறது. ஏற்கெனவே அங்கே உணவுத் தட்டுப்பாடு நிலவும் சூழலில் இந்தக் கலவரம் காரணமாக நிலவரம் இன்னும் மோசமடைந்துள்ளது.