world

img

சூடானில் ராணுவ புரட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் - பிரதமர் பதவி விலகல்

சூடானில் ராணுவ புரட்சிக்கு எதிராக பொதுமக்கள் தீவிர போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். 
சூடானில் கடந்த 2019-ஆம் ஆண்டு சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ஜனநாயக ரீதியான ஆட்சியில் பிரதமா் அப்தல்லா ஹாம்டோக் நிர்வகித்து வந்தார். பின், ராணுவத் தளபதி அப்தெல் அல்-ஃபத்ஹா புர்ஹன் அரசிற்கு எதிராக புரட்சியைத் தொடங்கினார். இதையடுத்து ராணுவம் பிரதமரை சிறை பிடித்தது. பின் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் பிரதமர் அப்தல்லா ஹாம்டோக் பிரதமராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. 
இந்நிலையில் மக்கள் ராணுவத்திற்கு எதிராக  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த கலவரங்களின் போது 2 பேர் பலியானகினர். பலர் காயமடைந்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாட்டு மக்களை காக்கத் தவறியதாக பிரதமர் அப்தல்லா தனது பதவியை ராஜினாமா செய்தார். சூடானில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து வருவதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.