சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஜாங் ஜூன் பேச்சு பெய்ஜிங், பிப்.26- ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் எந்த வொரு நடவடிக்கையும் உக்ரைன் நெருக்க டியைத் தணிக்க உண்மையிலேயே உகந்த தாக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடு கள் சபைக்கான சீனாவின் நிரந்தரப் பிரதி நிதி ஜாங் ஜூன் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் அல்பேனியாவால் முன்மொழியப்பட்ட உக்ரைன் தொடர்பான வரைவுத் தீர்மானம் அங்கீகரிக்கப்படாததை தொடர்ந்து பேசிய ஜாங் ஜூன் “ பிரச்சனை சரியாக கையாளப்படாவிட்டால், அல்லது கண்மூடித்தனமாக அழுத்தம் மற்றும் தடை களை விதித்தால், அது அதிக உயிரிழப்பு கள், அதிக சொத்து இழப்புகளை ஏற்படுத் தும். மிகவும் சிக்கலான- குழப்பமான சூழ் நிலைகள் அல்லது வேறுபாடுகளைக் களை வதில் அதிக சிரமங்களுக்கு வழிவகுக்கும்” என்றார்.
உக்ரைனின் நிலை மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து சீனா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறிய ஜாங் ஜூன், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற் றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் ஐநா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் கூட்டாக நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றும் சீனா எப்போ தும் தனது சொந்த நிலைப்பாட்டை உரு வாக்குகிறது என்றார். உக்ரைன் பிரச்சனை சரியான முறை யில் தீர்க்கப்படாவிட்டால் “அது அமைதித் தீர்வுக்கான கதவை முற்றிலுமாக மூடி விடவாய்ப்புள்ளது. இறுதியில் அதனால் பல அப்பாவி மக்களே பலியாவார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட மிகவும் வேத னையான அனுபவத்திலிருந்து நாம் ஆழ மான படிப்பினைகளைப் பெற வேண்டும். உக்ரைன் பிரச்சனை இன்று தோன்றிய ஒன்றல்ல. தற்போதைய நிலைமையும் ஒரே இரவில் திடீரென ஏற்பட்டதல்ல. இது நீண்ட காலமாக பல்வேறு காரணிகளோடு தொடர் புள்ளதன் விளைவாகும். தூதரகத் தீர்வுக்கான அனைத்து முயற்சிகளையும் வரவேற்கிறோம், ஊக்கு விக்கிறோம். உக்ரைன்-ரஷ்யா பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படக்கூடி யதே என்றார்.