ஹோசிமின் சிட்டி, ஜூன் 30- அண்மையில் தான் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தால் வியட்நாம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான உறவு ஆழ மாகியுள்ளது என்று வியட்நாமின் பிரதமர் ஃபாம் மின் சின் தெரி வித்துள்ளார். ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு வியட் நாமின் பிரதமர் ஒருவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். சீனாவில் புதிய தலைமை பொறுப் பேற்றுள்ள நிலையில், வியட்நாம் பிரதமரின் பயணம் இரு தரப்பிலு முள்ள பல்வேறு உயர்மட்டத் தலைவர்கள் நேரடியாகச் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கியது. இந்தப் பயணம் திடீர் என்று திட்டமிடப்பட வில்லை. கடந்த ஆண்டு நிறைவில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் குயென் பு டிராங் மேற்கொண்ட சீனப்பயணத்தின் தொடர்ச்சியாகவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரதமர் லி கியாங், தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுத் தலைவர் ஜாவோ லெஜி மற்றும் சீன மக்கள் அர சியல் ஆலோசனைக்குழுவின் தலை வர் வாங் ஹுவாங் ஆகியோருடன் வியட்நாம் பிரதமர் சந்தித்துப் பேசினார். வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி, அரசு மற்றும் மக்கள் ஆகி யோர் சீனாவுடனான உறவுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வரு கிறார்கள் என்று தான் சந்தித்த அனைத்துத் தலைவர்களிடமும் வியட்நாம் பிரதமர் ஃபான் மின் சின் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுக்கும், வியட்நாமுக்கும் இடையிலான உறவுகள் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது என்று வியட்நாம் அரசுத்தரப்பில் தெரி விக்கப்பட்டிருக்கிறது. இரு நாடு களுக்கும் இடையில் விரிவடைந்த ஒத்துழைப்புக் கூட்டு உடன்பாடு 2008 ஆம் ஆண்டில் போடப்பட்டது. இந்த உடன்பாடு 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில் இந்த உயர்மட்டக்குழுவின் பயணங்கள் நடந்து வருகின்றன. 15 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னேற்றங்களைத்தான் பிற நாடுகளுக்கான எடுத்துக்காட்டாக வியட்நாம் கூறியிருக்கிறது. பிற நாடுகளுடன் வலுவான உறவை விரும்பும் அதே நேரத்தில் சுதந்திரம், சொந்தக்காலில் நிற்பது, பன்முகத்தன்மை கொண்ட உலகம் மற்றும் வெளிநாடுகளுடனான உறவு களை பன்முகத்தன்மையுடன் வைத்துக் கொள்வது ஆகியவ ற்றிற்கு வியட்நாம் முன்னுரிமை கொடுக்கிறது. தென் சீனக்கடலை வைத்து அமெரிக்கா அரசியல் செய்ய முயற்சித்து வருகையில், அவரவர் கடற்பகுதி உரிமைகளை அங்கீகரிப்போம் என்று சீன-வியட்நாம் கூட்டறிக்கையில் தெரி விக்கப்பட்டிருக்கிறது. சீனத்தலைவர்களுடனான தங்கள் பேச்சுவார்த்தை மிகவும் வெளிப்படையாக இருந்தது என்று வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின் குறிப்பிட்டுள்ளார்.