world

img

ஆதிக்க சக்திகளைத் தடுப்போம்

பெய்ரூட், ஏப்.11- பாலஸ்தீனத்தில் அண்மையில் நிகழ்ந்து வரும் ஆக்கிரமிப்பு சம்பவங் கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் குறித்து காசாத்திட்டு பகுதியை நிர்வகிக்கும் ஹமாஸ் மற்றும் லெபனா னின் ஹெஸ்புல்லா அமைப்பும் ஆலோச னை நடத்தியுள்ளன. கடந்த சில நாட்களாக இஸ்ரேலின் ராணுவம் பெரும் அத்துமீறலை மேற்கொண்டு வருகிறது. அல் அக்சா மசூதிக்குள் புகுந்து நடத்திய தாக்கு தல்கள் உலகம் முழுவதும் கடும் கண்ட னத்தைச் சந்தித்துள்ளது.  இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசியும் சில அமைப்புகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.  இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால் எதிர் தாக்குதல் நடத்து வது பற்றி  ஹமாஸ் மற்றும் லெபனா னின் ஹெஸ்புல்லா அமைப்பும் விவாதித்துள்ளன. இதில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்குழுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் லெபனா னின் ஹெஸ்புல்லா அமைப்பின் பொதுச்  செயலாளர் சய்யது ஹசன் நஸ்ரல்லா ஆகிய இருவரும் நேரில் கலந்து கொண்ட னர்.  

தாக்குதல்களைத் தடுப்பதற்கான ஒரு அச்சு உருவாக வேண்டும் என்றும், அதில் தங்கள் இரு அமைப்புகளுக்கும் இடையில் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஒப்புக் கொண்டார்கள். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளைக் குறித்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டன. இஸ்ரேலின் வன்முறை வெறியாட்டங்களுக்கு எதிராக இவை ஏவப்பட்டாலும், ஒருங்கி ணைந்த தடுப்புப் பணிகள் இல்லை என்பதை இரு அமைப்புகளும் ஏற்றுக் கொண்டன. ஆயுதங்களைக் கொண்டு எதிர்வினை ஆற்றுவதோடு, சர்வதேச சமூகத்தின் உதவிகளை நாடுவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளும் அவசியம் என்று இருதரப்பும் கருத்து தெரிவித்தன. மீண்டும் இத்தகைய விவாதங்களை நேரில் சந்தித்து மேற்கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுத்திருக்கிறார்கள்.