பெய்ஜிங், டிச.20- 2023 ஆம் ஆண்டில் சீனப் பொருளா தாரத்தின் வளர்ச்சிக்காக எந்தெந்தத்துறை களுக்கு முன்னுரிமை தரப்போகிறோம் என் பதை விவாதிக்க வருடாந்திர மத்தியப் பொருளா தார பணிகள் மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள். இரு நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் முன்னு ரிமை தர வேண்டிய பணிகளை முடிவு செய்துள் ளனர். முன்னுரிமைகள் தருவதற்கு எப்படி அடையாளம் காண வேண்டும் என்பது பற்றிய உரையை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், அந்நாட்டின் ஜனாதிபதியுமான ஜி ஜின்பிங் உரையாற்றினார். தனது உரையில் 2022 ஆம் ஆண்டில் செய்த பணிகளைப் பரிசீலனை செய்ததோடு, தற்போதைய பொரு ளாதார நிலைமை குறித்த ஆய்வையும் அவர் மேற்கொண்டார். அடுத்த ஆண்டில் சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் பட்டியலிட்டார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களான லீ கெகியாங், லி கியாங், ஜாவோ லெஜி, வாங் ஹுனிங், ஹான் ஜெங், காய் கி, டெங் சியேசியாங் மற்றும் லி சி ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுத் தங்கள் கருத்துக் களைப் பகிர்ந்து கொண்டனர். சீனாவின் ஒட்டு மொத்த தலைமையே இந்த மாநாட்டில் பங்கேற்றது, இத்தகைய மாநாட்டிற்கும், பொரு ளாதாரப் பிரச்சனைகளுக்கும் தரப்படும் முக்கியத் துவத்தையே காட்டுகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் பொருளாதாரம் ஒட்டுமொத்த மீட்சியையும், முன்னேற்றத்தையும் வரும் ஆண்டில் எட்டவிருக்கிறது. இந்நிலையில் ஒரு நல்ல பணியை பொருளாதார மட்டத்தில் செய்ய உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பொருளாதார ரீதியான நிலைத் தன்மைதான் நமது முன்னுரிமைகளில் முதன் மையாக இருக்க வேண்டும். அதற்கு நிதான மான வளர்ச்சியை நோக்கி நாம் செல்வது அவ சியம் என்று கூட்டத்தில் பங்கேற்ற தலைவர் களும், வல்லுநர்களும் கருத்து தெரிவித்தனர்.
சீன நாணயமான யுவானின் பரிமாற்ற விகி தத்தை பொருத்தமான மற்றும் நிலையான அடிப்படை மதிப்பில் வைத்திருப்பது முக்கியம் என்றும், நிதி சார்ந்த நிலைத்தன்மையை மீண் டும், மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. அதோடு, வருவதை எதிர் கொள்ளும் வகையிலான மற்றும் நடைமுறை சாத்தியமான நிதிக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்றும், குறு மற்றும் சிறு வர்த்தக நிறுவனங்கள், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு கள் மற்றும் பசுமை மேம்பாடு ஆகியவற்றிற்கு வலுவான ஆதரவை நிதி நிறுவனங்கள் தர வேண்டும் என்றும் முடிவு எடுத்திருக்கிறார்கள்.
அறிவியல் மேம்பாடு
தேசிய அளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களை ஏராளமான அளவில் உருவாக்குவதை அந்தத் துறைக் கொள்கையின் அடிப்படை அம்சமாக மாற்று கிறார்கள். இதில் அரசுக்கு முழுமையான அதி காரம் தந்து, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் நிறுவனங்களுக்கு முதன்மையான பங்கு இருப்பதை வலியுறுத்தி, அத்தகைய கண்டு பிடிப்புகளில் சாதனை படைக்கச்செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. தொழிற்துறையில், பாரம்பரியமான தொழில்களையும், வளர்ந்து வரும் கேந்திரத் தொழில்களையும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது மற்றும் தரம் உயர்த்துவதை நோக்கமாகக் கொள்ளப் போகிறார்கள். சமூகக் கொள்கைகளில், வேலைவாய்ப்பு க்கு முன்னுரிமை என்பது அனைவரின் கருத்தாக வும் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இது அவசியம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து வெளியில் வரும் இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். விலைவாசி உயர்வை மக்கள் தாக்குப்பிடிக்கும் வகை யில், குறித்த நேரத்தில் உறுதியான நடவடிக்கையை எடுப்பது அவசியம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வீட்டுவசதி, ஏற்றுமதி - இறக்குமதி, மக்கள் தொகை மற்றும் பேரழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் இந்த மாநாட்டில் விவாதித்து, பல முடிவுகளை எடுத்திருக்கிறார்கள்.