world

img

ஜப்பான் தலையில் 1,38,000 கோடி அமெரிக்கக் காட்டில் பணமழை

டோக்கியோ, ஏப்ரல் 21- ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கான செலவு கடந்த ஆண்டில் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 38 ஆயி ரம் கோடி ரூபாய் என்று தெரிய வந்திருக்கிறது. ஜப்பானில் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு குட்டித் தீவுகள் அமெரிக்கப் படைத்தளங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள படைகளின் எண்ணிக்கைக்கு அடுத்த படியாக, ஜப்பானில்தான் அதிக எண்ணிக்கையில் அமெரிக்கப் படைகள் உள்ளன. இந்தப் படைகளை நிறுத்தி வைப்ப தற்கான செலவு அத்தனையும் ஜப்பான் ஏற்றுக் கொண்டுள்ளது.  அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டுள்ள தற்கு நாட்டு மக்களிடம் கடும் எதிர்ப்பு நிலவி  வருகிறது. ஜப்பானின் சட்ட, திட்டங்கள் எதுவும் ஜப்பானில் உள்ள அமெரிக்கப் படை களுக்குப் பொருந்தாது. ஜப்பான் மண்ணில் அமெரிக்கப் படைவீரர்கள் யாரும் தவறு இழைத்தால் அவர்கள் மீது ஜப்பானியச் சட்டப்படி வழக்குகள் எதுவும் பதிய இய லாது.

நாங்கள்தான் விசாரிப்போம் என்று  அமெரிக்க ராணுவம் சொல்லும், தவறி ழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கிய தாக எந்தவித செய்தியும் இதுவரையில் வெளியானதில்லை. ஜப்பான் எவ்வளவு பணத்தை செல வழிக்கிறது என்பது கூட வெளியிடப் படாமலேயே வைக்கப்பட்டிருந்தது. அந்நா ட்டின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரு மான அகாமின் செய்கின் இந்த விபரங் களைக் கோரியிருந்தார். அவருக்கு ராணுவ அமைச்சகம் அனைத்து விபரங்களையும் வழங்கியிருக்கிறது. அதன்படி, 1 லட்சத்து 38 ஆயிரத்து 560 கோடி ரூபாயை 2021 ஆம் ஆண் டில் மட்டும் அமெரிக்க ராணுவத்திற்காக ஜப் பான் செலவிட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.  இவ்வளவு அதிகமான தொகையை ஒவ்வொரு ஆண்டும் ஜப்பான் செலவு செய் கிறது. அமெரிக்கா இதை ஒரு வியாபார மாகவே மாற்றியிருக்கிறது. இதுபோன்ற நிலை பல நாடுகளில் நிலவுகிறது. கோடிக் கணக்கான கோடிகள் அமெரிக்காவின் கஜானாவுக்கு பிற நாடுகளில் இருந்து மாற்ற ப்படுகிறது என்பதையே ஜப்பான் கம்யூ னிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தியிருக்கிறது.