world

img

சிங்கப்பூரின் அதிபரானார் தர்மன் சண்முகரத்னம்!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில், தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் 70.4% வாக்குகளைப் பெற்று 9-ஆவது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்  செய்யப்பட்டது.

12 ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், சுமார் 27 லட்சம் மக்கள் வரை வாக்களித்த நிலையில் இன்று நடைப்பெற்ற வாக்கு எண்ணிக்கையில் தர்மன் சண்முகரத்தினம் வெற்றிப் பெற்றார்.

இவர் சிங்கப்பூர் அரசின் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த குறிப்பிடத்தக்கது.