world

img

போராட்டக்காரர்களுக்கு ரணில் எச்சரிக்கை

கொழும்பு, ஜூலை 21- போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக செயற்படு வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பு - கங்காராமை விஹாரைக்கு புதன்கிழமை இரவு சென்று வழிபாடு செய்தபின் ஊடகங்களிடம் பேசினார்.  அப்போது அவர், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக, வீடுகளை தீக்கிரையாக்கி, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை கைப்பற்றுவது சட்ட  விரோத செயல் என கூறினார். அவ்வாறு சட்டவிரோதமாக செயற்படுவோருக்கு எதிராகத்தான்  செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், எதிர்காலமொன்றை அமைக்க வேண்டும் என போராடுவார்களாயின், அதற்கு முழுமை யான ஆதரவை நான் வழங்குவேன். அமைதியாக போராடு வோருக்கு நான் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளேன்.

வேண்டுமென்றால், அமைதியாக போராடுவோருக்கு மற்றுமொரு மேடையை நான் அமைத்துக்கொடுப்பேன் என்றார்.  அவர் மேலும், இந்த நாட்டின் நாடாளுமன்றத்திலுள்ள கட்சிகளை இணைத்துக் கொண்டு, ஒத்துழைப்புடன் செயற்பட நான் எதிர்பார்க்கின்றேன். ஒன்றாக இணைந்து பணியாற்ற ஏன் முடியாது என மக்கள்  கேள்வி எழுப்புகின்றனர். நாட்டை இல்லாதொழிப்ப தற்காகவே நாம் எதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடு கின்றோம் என இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அது மிக முக்கியமான கேள்வி என்ற அவர், நானும் அது குறித்து சிந்தித்துப் பார்த்துள்ளேன். அப்படியென்றால், இந்த நடைமுறையை மாற்றி யமைக்க வேண்டும். இளைஞர்களின் குரல் மற்றும் ஏனை யோரின் குரல்களை நாம் செவிமடுக்க வேண்டும். தற்போதுள்ள நடைமுறைக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நடைமுறையை மாற்று மாறு கூறுகின்றார்கள். அமைதியாக கருத்துக்களை வெளிப்படுத்துவோருக்கு, அவர்களின் கருத்துக்களை வெளியிட நாம் இடமளிக்க வேண்டும். எமக்கும் அதற்கு பதி லளிக்க முடியும். அமைதியாக இருப்போரின் கருத்துக் களையும் நாம் கேட்டறிந்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.