கொழும்பு, ஏப்.13- இலங்கை ஜனாதிபதி கோத்த பய ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ள னர். கடந்த 74 ஆண்டு கால வர லாற்றில் இல்லாத வகையில், இலங்கை அரசு கடும் நிதி, பொரு ளாதார நெருக்கடியில் சிக்கி தவிக் கிறது. மேலும் விலைவாசியும் கடுமையாக ஏறி உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜ பக்சே பதவி விலக வலியுறுத்தி விடிய விடிய போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வருகின்ற னர். இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தீர்மா னத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா கையெழுத்திட்டார். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம் பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இலங்கை அதிபருக்கான அதிகாரங்களை குறைப்பதற்கான தீர்மானமும் தாக்கல் செய்யப்படுகிறது. கோத்த பய ராஜபக்சே மற்றும் மகிந்த ராஜ பக்சேவுக்கு எதிரான தீர்மானங்க ளுக்கு இலங்கையின் பெரும்பா லான கட்சிகள் ஆதரவு தெரிவிக் கின்றன. இலங்கை அதிபர் பதவி விலகக் கோரி மக்கள் போராடி வரும் நிலையில், தீர்மானமும் தாக்கல் ஆவதால் நெருக்கடி முற்றுகிறது. நெருக்கடி முற்றுவதை அடுத்து போராடுபவர்களுடன் பேச்சுவார்த் தைக்கு தயார் என்று இலங்கை பிரதமர் ராஜபக்சே கூறியுள்ளார்.
வீதிகளில் மக்கள் போராட்டம்
இதனிடையே, இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி கொட்டும் மழையிலும் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இலங்கை ஜனாதிபதி கோத்த பய ராஜபக்சேவுக்கு எதிராக 5-ஆவது நாளாக மக்கள் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பில் காலிமுகத்திடலில், கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் பெண்கள், இளை ஞர்கள், வயதானவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் தங்குவ தற்கு ஏதுவாக, தற்காலிக கூடா ரங்கள், உணவு, மெத்தைகள் மற்றும் நகரும் கழிப்பறைகள் அமைத்துள்ளனர். தாங்கள் தங்கியுள்ள போராட்டக் களத்தி ற்கு ‘கோட்டா கோ கம’ என்று பெய ரும் சூட்டியுள்ளனர். மேலும், ‘‘ராஜ பக்சே’’க்களின் உருவம் பொருத்திய பானைகளை உடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற னர்.