பியூனஸ் அயர்ஸ், ஜன.24- லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகள் அனைத்தும் ஒரு குடும்பமாக மாற வேண்டும் என்று கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் டயஸ்- கானெல் வலியுறுத்தியிருக்கிறார். அமெரிக்கப் பகுதியில் இருக்கும் நாடுகளை இணைத்து லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளின் சமூகம் என்ற அமைப்பு(செலாக்) உருவாக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் உரு வான இந்த சமூக அமைப்பில் 33 நாடுகள் இணைந்துள்ளன. அமெரிக்க நாடுகளின் அமைப்புக்கு மாற்றாக இந்த அமைப்பு உரு வாக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் இருந்து விலகிக் கொள்வதாக பிரேசில் அறிவித்தது. ஆனால், தற்போது இடது சாரித் தலைவர் லூலா ஜனாதிபதியான பிறகு, மீண்டும் இணைவதாக பிரேசில் அறிவித்திருக் கிறது. அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் நகரில் செலாக்கின் ஏழாவது உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்க அனைத்து அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளின் தலைவர்கள் வந்திருக்கிறார்கள். உச்சிமாநாட்டிற்கு முன்பாக சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்த கூட்டம் நடைபெற்றது. இதில் கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் டயஸ்-கானெல் பங்கேற்று உரையாற்றினார். இந்த சமூக அமைப்பில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளும் ஒரே குடும்பமாக மாறி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் தனது உரையில் வலியுறுத்தினார். தனது உரையின்போது, “எங்கள் நட்புறவு, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டிய நட்பு நாடான அர்ஜெண்டினாவில் நாங்கள் இருக்கிறோம். சே குவேராவின் சொந்த நாட்டில் நாங்கள் இருப்பது மற்றும் பிடல் காஸ்ட்ரோ மற்றும் எங்கள் நாடான கியூபா மீது அர்ஜெண்டினா மக்கள் காட்டும் அன்பு போன்றவை மறக்க முடியாதவையாகும். ஏராள மான நினைவலைகளை இந்த மாநாடு எங்க ளுக்குக் கொண்டு வருகிறது” என்றார்.
இடதுசாரி ஜனாதிபதிகள் பொறுப்பேற்ற பிறகு, பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளின் பொருளாதாரம் வலுவடைந்திருக் கின்றன. பொலிவியா நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் தனது பின்னடைவுகளில் இருந்து வெனிசுலா மீண்டுள்ளது. அதே வேளையில், மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதிகளை வெளி யேற்றும் முயற்சியும் சில நாடுகளில் நடந்து வருகின்றன. பெருவில் பெட்ரோ காஸ்டில்லோ பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்களின் மீதான அடக்கு முறையால் 52 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெருவில் நடந்து வரும் ஜனநாயக விரோத நட வடிக்கைகளைப் பெரும்பாலான தென் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகள் கண்டித் துள்ளன.
மாநாட்டில் லூலா
ஜெய்ர் போல்சானரோவின் காலத்தில் செலாக் அமைப்பில் இருந்து பிரேசில் வெளி யேறுவதாக அறிவித்தனர். 2022 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரித் தலைவர் லூலா, செலாக் அமைப்பில் பிரேசில் மீண்டும் சேருவதாக அறிவித்தார். தலைநகர் பியூனஸ் அயர்சில் விடுதலைப் போராளி சான் மார்டினுக்கு மரி யாதை செலுத்திய லூலா, அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ஆல்பெர்ட்டோ பெர்னாண்டசைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். தென் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைந்து பொதுவான நாண யத்தை உருவாக்குவது பற்றி லூலா வலி யுறுத்தி வருகிறார். சமூக அமைப்புகள் நடத்திய கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத் தலைவர்கள், மக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகள், பழங்குடி அமைப்புகள் மற்றும் முற்போக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். பிராந்திய அமைப்புகளின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும், ஏகாதிபத்தியத்தின் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதி கள் வலியுறுத்தினார்கள். ஒருபோதும் இறை யாண்மையை விட்டுக் கொடுத்துவிடக்கூடாது என்ற கருத்தை அனைவருமே பதிவு செய்தார்கள்.