ஹவானா, ஜூன் 16- சுகாதாரத் துறையில் கேரளா வுடன் ஒத்துழைக்க கியூபா விருப்பம் தெரிவித்துள்ளது. கியூபாவில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு எட்டப் பட்டது. இதற்கான கலந்துரையாட லில், பொது சுகாதாரம், வெப்ப மண்டல மருத்துவம், நரம்பியல் ஆராய்ச்சி, மூலக்கூறு நோயெ திர்ப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சை ஆகிய துறைகளில் உலகப் புகழ்பெற்ற கியூபா சுகாதார அமைப்பு பற்றி முதலமைச்சர் குறிப்பிட்டார். கியூபா உயிரி தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச தரத்துடன் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை தயாரிப்பதில் பெரும் முன்னேற்றம் கண்டுள் ளது. இந்தத் துறையின் ஒத்துழைப்புடன், கேரளாவில் கவனம் பெறத்தக்க மாற்றங்கள் ஏற்படும். பயோகியூபா பார்மா (BIOCUBAFARMA) உடன் இணைந்து கேரளாவில் தடுப்பூசி யை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். சுகாதாரம் தொடர்பான துறைகளில் உலகளா விய கூட்டாண்மை மற்றும் முத லீட்டை முதல்வர் வரவேற்றார். இதற்காக மையம் அமைக்க ஆர்வமும் தெரிவிக்கப்பட்டது
கியூபா மற்றும் கேரளா வில் உள்ள சுகாதார நிறுவனங்களுக் கிடையே ஒத்துழைப்பு மற்றும் கருத்து பரிமாற்றத்திற்கான நிபந்தனைகள் உருவாக்கப்படும். வருடாந்திர பயிலரங்குகள் போன்றவற்றின் ஊடாக இத்துறை யின் உறவை நீண்ட காலத்திற்கு பேண முடியும் எனவும் முதலமைச் சர் நம்பிக்கை தெரிவித்தார். அடுத்த நடவடிக்கைக்காக கேரளா மற்றும் கியூபாவைச் சேர்ந்த அதி காரிகளைக் கொண்ட பணிக்குழு உருவாகும். இதற்கு கேரள சுகா தாரத் துறை முதன்மைச் செயலா ளர் தலைமை தாங்குவார். கியூப தூதுக்குழு சுகாதாரம், ஆராய்ச்சி மற்றும் கட்டுமானத் துறைகளில் கூடுதல் விவாதங்களுக்காக நிபுணர்கள் தலைமையிலான கியூபா தூதுக்குழு கேரளாவுக்கு அழைக்கப் படும் என்றும் முதல்வர் தெரி வித்தார். இந்த கலந்துரையாடலில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜும் பேசினார். பயோகியூபா பார்மா தலைவர் எட்வர்டோ மார்டினேஸ் டயாஸ் மற்றும் தேசிய நரம்பியல் மையத்தின் (CNEURO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் மிட்செல் வால்டஸ் சோசா, மூலக்கூறு நோய் எதிர்ப்பி யல் மையத்தின் (CIM) இயக்கு நர் ஜெனரல் எட்வர்டோ ஓஜிடோ மாகஸ் ஆகியோருடன் இந்த சந்திப்பு நடந்தது.