world

img

கியூபா ஓட்டல் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

கியூபா தலைநககரில் உள்ள உள்ள சொகுசு ஓட்டலில் ஏற்பட்ட விபத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிணக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. 96 அறைகள் கொண்ட இந்த ஓட்டலை புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது.
சில நாட்களுக்கு முன் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டல் கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழுந்தது. இயற்கை எரிவாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது விசாரணையில் தெரியவந்தது. சக்திவாய்ந்த வெடிவிபத்தால் ஓட்டலைச் சுற்றியுள்ள கட்டிடங்களும் சேதமடைந்தன.
தகவலறிந்த மீட்புக்குழு அங்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.