world

காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுக்கு இந்தியா கண்டனம்

ஒட்டாவா, செப்.19-  கனடாவில் ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவிற்கு  தொடர்பு உள்ளது எனவும் அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் அந் நாட்டு நாடாளுமன்றத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத னைத் தொடர்ந்து கனடாவுக்கான இந்தி யத் தூதரை வெளியேற்றியது. கனடா பிரதமரின் குற்றச்சாட்டைமறுத்து கண்ட னம் தெரிவித்துள்ள இந்திய அரசு பதிலடி யாக, கனடா தூதரக அதிகாரியை இந்தியா வை விட்டு வெளியேற உத்தரவிட்டது. இந்தியாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இது குறித்து பேசியதாகவும் கனடா மண்ணில் கனடா குடிமகன் கொல்லப்பட்டதன் பின்ன ணியில் எந்தவொரு வெளிநாட்டு அர சாங்கத்தின் தலையீடும் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது; அது தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவது என்றும்; இது சுதந்திரமான, வெளிப்படை யான மற்றும் ஜனநாயக நாடுகளின் அடிப்படை விதிகளுக்கு முரணானது என்றும் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். இந்தியாவிற்கு எதிரான பிரிவினை வாத சக்திகளின் நடவடிக்கைகளை கட்டுப் படுத்த கனடா போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜி 20 மாநாட்டின் போதே மோடி  குற்றம் சாட்டியிருந்தார். இதன் பின்னணியில் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் இந்தியாவுட னான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற் கான பேச்சு வார்த்தைகளையும் கனடா சமீபத்தில் நிறுத்தியது. இதனால் கனடா வர்த்தகத்துறை அமைச்சர் இந்தியா வருவதை திடீரென ஒத்தி வைத்தார்.