சவுதி அரேபியாவில் உணவகம் ஒன்றில் 30 ஆண்டுகளாக கழிவறையில் தயாரிக்கப்பட்டு வந்த சமோசாவால் உணவு பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் பிரபலமான உணவகம் ஒன்று, 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் மீது உணவுத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
இந்நிலையில் ரகசிய தகவலின்படி, உணவுத்துறை அதிகாரிகள் உணவகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது உணவகத்தின் சமையலறைக்கு அருகிலிருந்த கழிப்பறையில்தான் சமோசா உள்ளிட்ட நொறுக்குத்தீனிகள் தயாரிக்கப்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் மதிய உணவுகள் உட்பட மற்ற உணவுகள் அதே கழிவறையில் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து சமையலுக்கு பயன்படுத்தி வந்த அனைத்து பொருட்களுமே காலாவதியானவை. இந்த உணவகத்தில் பூச்சிகளும் எலிகளும் கூட வசித்து வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து உணவு பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைதொடர்ந்து, அந்த உணவகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து சவுதி அதிகாரிகள் கூறுகையில், பல்வேறு இடங்களில் 2,833 ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருவதாக தெரிவித்தனர். அதில் 43 முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 26 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.