எகிப்து காலநிலை உச்சி மாநாடு பூமி தீவிர வேதனை களை வெளிப்படுத்துகிறது என்ற முன்னெச்சரிக்கையுடன் நவம் பர் 8 அன்று தொடங்கியது. 2015 முதல் உள்ள எட்டு ஆண்டுகள் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் வெப்பம் மிகுந்தவை என்று ஐநா அறிக்கை கூறுகிறது. கால நிலை மாற்றங்களின் எதிரொலியே இந்த அறிக்கை என்று மாநாட்டில் அளித்த காணொலியில் ஐநா செயலர் அன்டோ னியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
1.15 டிகிரி
தொழிற்புரட்சிக்குப் பிறகு உள்ள காலத்தில் வளி மண்டல வெப்பநிலை சராசரி 1.15 டிகிரி செல்சியஸ் அதி கரித்துள்ளது என்று இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இது தீவிர கடல்நீர் மட்ட உயர்வு, பனிப்பாறைகள் உருகு தல், வெப்ப அலை வீச்சு போன்றவற்றி ற்குக் காரணமாகும் என்று அஞ்சப் படுகிறது. 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு 2020 ஜனவரி முதல் உள்ள இரண்டரை ஆண்டுகாலத்தில் மட்டும் கடல்நீர் மட்டம் 10 மில்லிமீட்டர் உயர்ந்தது. இது பற்றிய விரிவான ஆய்வறிக்கை 2023 ஏப்ரலில் வெளிவரும்.
இழப்புகளுக்கு நஷ்ட ஈடு
பொருளாதாரப் பிரச்சனை போன்ற வை காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தடையாக அமையக் கூடாது என்று மாநாட்டின் தலைவர் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஷமேஹ் ஷௌரி கூறினார். 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலை வர்கள் இரண்டு வாரம் நீளும் இம்மா நாட்டில் பங்கேற்கின்றனர். நீடித்த நிலையான வளர்ச்சிக்குரிய பாதைகளைத் தேர்ந்தெடுக்க அரசுகள் முன்வரவேண்டும் என்று சூழல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். வளர்ந்த நாடுகள் காலநிலைப் பேரி டர்களால் ஏற்படும் சேதங்களுக்கும், இழப்புகளுக்கும் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று வளர்ந்துவரும் நாடுகள் வலுவாக கோரிக்கை விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கண்டுபிடிப்புகள்
புதிய கண்டுபிடிப்புகள் மூலம் காலநிலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று ஐநா தலைவர் கூறினார். காட்சிக் கூடங்கள், பட்டறைகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை மாநாட்டின் பகுதியாக நடக்கும். காப்26இல் பங்கேற்ற 193 நாடுகளில் 23 நாடுகள் மட்டுமே இதுவரை காலநிலை மாற் றத்தைத் தடுக்க தாங்கள் எடுத்துள்ள மற்றும் எடுக்கப்போகும் செயல்திட்டங் களை சமர்ப்பித்துள்ளன.
தொடரும் குறிக்கோள்கள்
காப்26 கிளாஸ்கோ மாநாட்டில் புதை படிவ எரிபொருளாகப் பயன்படும் நிலக்கரியின் பயன்பாட்டைக் குறைத்தல், 2030ஆம் ஆண்டுடன் காடு அழிப்பை முழுமையாக நிறுத்து தல், 2030ஆம் ஆண்டுடன் மீத்தேன் உமிழ்வை 30 விழுக்காடாகக் குறைத் தல், காலநிலை மாற்றத்தை தடுக்க உதவும் புதிய திட்டங்களை ஐநாவிற்கு சமர்ப்பித்தல் போன்ற குறிக்கோள்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் தொடர்கின்றன.
சூழல் போராளிகள் புறக்கணிப்பு
காலநிலை உச்சிமாநாடுகள் சூழலை சீர்படுத்த உருப்படி யாக எதுவும் செய்வதில்லை. ஆட்சியா ளர்கள் இதனை தங்கள் புகழைப் பரப்பும் இடமாக மாற்ற முயல்கின்றனர் என்று குற்றம் சாட்டி கிரெட்டா தன்பெர்க் உட்பட பல சூழல் போராளிகள் இம்மாநாட்டைப் புறக்கணித்துள்ளனர். காப்26 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவையும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே இவர்களின் குற்றச்சாட்டு. என்றாலும் கோடிக்கணக்கான மக்கள் காப்27 மாநாட்டை உருப்படியான முடிவு கள் எடுக்கும் இடமாக ஆட்சியில் இருப்ப வர்கள் மாற்றுவார்கள் என்ற நல்ல நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.