world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஜப்பான் எதிர்க்கட்சி தலைவராக  யோஷிஹிகோ நோடா தேர்வு

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யோஷி ஹிகோ நோடா  அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஜப்பான் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் (CDPJ) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான போட்டியில் அக்கட்சியின் நிறுவனரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  யூகியோ எடானோ உட்பட மூன்று வேட்பாளர்களை வீழ்த்தி யுள்ளார். 2011 முதல் 2012 வரை நோடா ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜப்பான் பிரதம ராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை பிளாஸ்டிக் பொருட்கள்  பயன்பாட்டிற்கு தடை 

கினியா முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்  பொருட்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விற்பனை செய் தல், பயன்படுத்துவதற்கு  தடை  ஆணை வெளி யிடப்பட்டுள்ளது.  பொது சுகாதாரத்தை மேம் படுத்தவும், மக்கும் பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் அபாயங்களைச் சமாளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரி வித்துள்ளது. 

ஈரான் சுரங்க விபத்து  பலி எண்ணிக்கை உயர்வு

ஈரான் நாட்டின் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. சுரங்கத்தின் இரு வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பக்கம் 30 தொழிலாளர்களும் மற்றொரு பகுதியில் 8 தொ ழிலாளர்களும் பலியாகியுள்ளனர். மேலும் 15 க்கும் அதிகமான தொழிலாளர்கள் இடிபாடுக ளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பனி நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல்  கொலைவெறித் தாக்குதல்

தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 100 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 700 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளதா கவும் அந்நாடு சுகாதார அமைச்சகம் தெரி வித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினாலும் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் தளங்களை சரியாக  பயன்படுத்த நடவடிக்கை தேவை

அறிவியலை தவறான வழியில் பயன்படுத்தவும், கோடிக்கணக்கான மக்களுக்கு தவறான தகவல் மற்றும் வெறுப்பைப் பரப்பவும் டிஜிட்டல் தளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உலகளவில் தற்போது உருவாகியுள்ள அச்சுறுத்தலை சரிசெய்ய தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படுகிறது என ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியே குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.