போர்ப் பதற்றத்தை தூண்டும் இங்கிலாந்து
வெனிசுலா, கயானாவிற்கு இடையே இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியை உரிமை கொள்வதில் எழுந்துள்ள எல்லைப் பிரச்சனை போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியது. தென் அமெரிக்க பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் உருவாக்கக் கூடாது, நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பிரேசில் வேண்டுகோளுக்கு இணங்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளன.இந்நிலையில் இங்கிலாந்து அப்பகுதிக்கு போர்க்கப்பலை அனுப்பி போர்ப் பதற்றத்தை தூண்டிவருகிறது.
ஜெர்மனி ஆயுத ஏற்றுமதி 1000 சதவீதம் அதிகரிப்பு
ஜெர்மனி, இஸ்ரேலுக்கு செய்யும் ஆயுத ஏற்றுமதி 1000 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 32.3 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட தொகையை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாகும்.அக்டோபர் 7 இஸ்ரேல் காசா மீது போர் அறிவித்த பிறகு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தொழில் நுட்பங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேல் துறைமுகம் 85 சதவீத முடக்கம்
இஸ்ரேல் நாட்டின் எல்யேட் துறைமுகம் கப்பல் போக்குவரத்து இல்லாமல் 85 சதவீதம் வரை முடங்கி விட்டது. காசா மீதான இஸ்ரேல் போர் முடிவுக்கு வர வேண்டும் அதுவரை இஸ்ரேல் தொடர்புடைய அனைத்து கப்பல்களுக்கு தாக்கப்படும் என ஹவுதி அமைப்பு அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது. இது அந்நாட்டின் பொருளாதாரம் மட்டும் இன்றி உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற் படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஜெனிவா விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா விமான நிலையத்தில் முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து ஊழி யர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.துபாய் தேசிய விமான போக்குவரத்து நிறுவனம் (Dnata) தொடர்ந்து வாக்குறுதிகள் கொடுக் கிறது. ஆனால் நிறைவேற்றுவதில்லை, இம்முறை எங்களுக்கு வாக்குறுதிகள் வேண்டாம். எங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றுங்கள் எனக்கூறி தொழிலாளர்கள் விமான நிலையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது
அரபிக்கடல் வழியே இந்தியா வந்த ரசாயனக் கப்பல் ட்ரோன் தாக்கு தலுக்கு உள்ளான போது அந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சுமத்தி இருந்தது. இந்த குற்றச்சாட்டு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதது என்றும் இந்த தாக்குதலில் ஈரான் ஈடுபடவில்லை என்றும் ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த கப்ப லில் 20 க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் இருந்தனர். உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.