அமெரிக்காவிற்கு ரஷ்யா எச்சரிக்கை
ரஷ்யாவின் சொத்துக்களை கைப்பற்றினால் அமெரிக்கா வும் ஐரோப்பிய ஒன்றியமும் கடு மையான எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத் துள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தவுடன் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் 30,000 கோடி டாலர் சொத்துக்களை முடக்கின. “உங்களுக்குச் சொந்தமில்லாத ஒன்றைப் பெறுவது திருட்டு” என ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிகரெட் புகையால் கற்றல் ஆற்றல் பாதிப்பு
கர்ப்பிணிகள் சிகரெட் புகை யால் பாதிக்கப்படும் போது அவர்களின் குழந்தைகள் மொழி மற்றும் நினைவாற்றல் பாதிப்பை எதிர் கொள்வதாக சர்வதேச ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. 9-10 வயதிற்குட்பட்ட 11,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1,607 குழந்தைகளின் தாய்மார்கள் சிகரெட் புகை யால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் மூளையை ஆய்வு செய்து இந்த முடிவை அறிவித்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு சீனா கண்டனம்
ரஃபாவில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலை சீன அரசு வலியுறுத்தியுள்ளது. போரை நிறுத்தவில்லையென்றால் கடுமை யான மனிதப் பேரழிவு ஏற்படும் என எச்சரித்துள்ளது. ரஃபாவில் நடப்ப வற்றை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது. பாலஸ்தீனர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் இஸ்ரேலின் செயல்களை கண்டிப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்சுவோ தெரி வித்துள்ளார்.