world

img

தீக்கதிர் உலக செய்திகள்

மனித கேடயமாக பயன்படுத்தி  பாலஸ்தீன இளைஞன் கொலை

ஜாஹர் ரடாத் என்ற 19 வயது பாலஸ்தீன இளை ஞரை மனிதக்கேடயமாக பயன்படுத்தி இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது. ஆக்கிரமிக் கப்பட்டுள்ள மேற்குக் கரையில் உள்ள துல்கர் மில் உள்ள சைடா நகரைச் சேர்ந்த அந்த இளை ஞரை ஜூலை 23 அன்று சிறையில் அடைத்து உணவுகொடுக்காமல் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். அதன் பிறகு இஸ்ரேலின் போர் வாகனத்தின் முன் மனித கேடயமாக கட்டி நகரம் முழுவதும் சுற்றிவிட்டு சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு  22 பேர் பலி 

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாநிலத்தில் பிரிவினை வாத இயக்கத்தை சேர்ந்த ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்த பேருந்தை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக பயணிகளின் இனத்தைப் பற்றி கேள்வி கேட்டதாகவும், அதன் பிறகே துப்பாக்கிச்சூடு நடந்த தாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இந்தத் தாக்குதலில் 22 பேர் பலியானதாகவும் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமீபியாவில் 100 ஆண்டுகளில்  இல்லாத வறட்சி

நமீபியா கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது என ஐ.நா. அவை தெரிவித்துள்ளது. மேலும் நமீபியாவில் 84 சதவீத உணவு இருப்பு ஏற்கனவே தீர்ந்துவிட்டதாகவும் ஐநா மனிதாபிமான அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதனால் நாட்டின் மக்கள் தொகையில்கிட்டத்தட்ட பாதிப் பேர் (14 லட்சம் ) செப்டம்பர் மாத இறுதியில் அதிக ளவு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ள உள்ளார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.