world

img

நாளொன்றுக்கு 1 லட்சம் குழந்தைகளுக்கு ஆன்லைனில் பாலியல் துன்புறுத்தல்

ஒவ்வொரு நாளும்  பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா கிராம் பயன்படுத்தும் சுமார் 1 லட்சம் குழந்தை கள் ஆன்லைனில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள் கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை மெட்டா நிறுவனம் கூறி யுள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய பயன்பாடு கள் அதிகரித்த பிறகு  தனியுரிமை பாதுகாப்பு  கேள்விக் குள்ளாகி உள்ளது.

குறிப்பாக பெண்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கும் மிரட்டலுக்கும்  ஆளாகும் கொடுமை நடந்து வருகிறது.  இந்நிலையில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும் நாளொன்றுக்கு  1 லட்சம் பேர் மெட்டா நிறுவனம் அதன் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா கிராம் ஆகியவற்றில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப் படுவதாகத் தெரிவித்துள்ளது. 

குழந்தை வேட்டையாளர்களின் சந்தை 

இவ்வாறு தொடருமானால் மெட்டா சமூக வலைதள ஆப்களை, ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து அகற்றும் என அச்சுறுத்தும் அளவிற்கு இந்நிலை மோசமாகியுள்ளதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ள னர். மேலும் மெட்டாவின் சமூக வலைப்பின்னல்கள் குழந்தை களை வேட்டையாடுபவர்களின் சந்தையாக மாறிவிட்ட தாகக் கடுமையாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

மேலும் மெட்டா நிறுவனத்தின் ஆப்களில் குழந்தைகள் பாதுகாப்புக் குறைபாடு  குறித்தான வழக்கில் குழந்தை கடத்தல்காரர்கள் கூட பேஸ்புக்கின் செய்தி அனுப்பும் மெசஞ்சர் தளத்தில், குழந்தை கடத்தும் தகவல்களை  பரிமாறிக் கொண்டதாகக்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கட்சிகளுக்காக கணக்குகள் முடக்கம் 
அரசியல் கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப பல கணக்கு களை, பல்வேறு காரணங்களைக் கூறி முடக்கும் மெட்டாவின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அளவுக்கு அதிக மான பாதுகாப்பு குறைபாடுகளை கொண்டுள்ளது. அதை முறையாகச்  சரிசெய்யாமல் அப்பாவிக் குழந்தைகளை பலியாக்குகிறது என சமூக ஊடக பயனர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.