முனிச்,பிப்.18- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல் மாலிகி ஆகியோர் ஜெர்மனியில் நடைபெறும் முனிச் மாநாட்டில் சந்தித்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் காசாவின் தற்போதைய நிலை குறித்து இருவரும் பேசிக்கொண்டதாக தனது ‘எக்ஸ்’ தளத்தில் ஜெய் சங்கர் பதிவிட்டுள்ளார்.
மாநாட்டின் போது, “பாலஸ்தீனப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ‘இரு நாடுகள்’ என்ற தீர்வை பல நாடுகள் ஆதரிப்பது இப்போது புதிதல்ல” என்றும் “ஆனால் அது முன்பை விட தற்போது அவசரமானது” என்றும் ஜெய்சங்கர் பேசியுள்ளார். அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்கு தலை ‘பயங்கரவாதம்’ என்றும், அதேநேரம் ‘சர்வதேச சட்டங்களைக் கடைப்பி டிக்க வேண்டிய கட்டுப்பாடு இஸ்ரேலுக்கு உள்ளது” என்றும் கூறினார்.