world

img

கிறிஸ்துமஸ் : வெறிச்சோடிக்கிடந்த பெத்லகேம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பெத்லகேமில் உள்ள மேங்கர் சதுக்கத்தில், காசாவிற்கு ஆதரவாக, நேட்டிவிட்டி தேவாலயத்திற்கு வெளியே, முள் கம்பியால் சூழப்பட்ட இடிபாடுகளுக்கு மத்தியில் நிற்கும் உருவங்களைக் கொண்ட கிறிஸ்துமஸ் குடில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. (வலது) பெத்லகேம் நகர்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டதால், இயேசு பிறந்த இடமான பெத்லகேம் (டிசம்பர் 24) ஞாயிறன்று பேய் நகரத்தை ஒத்திருந்தது. என அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“பாலஸ்தீனர்களாகிய நாங்கள், எப்பொழுதும் மீண்டு வருவோம்... இது ஒரு காலத்தில் எங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடியாக இருந்தாலும் சரி. நாங்கள் சரியா இருப்போம். ஆனால் உடந்தை யாக இருப்பவர்களுக்காக நான் வருந்து கிறேன்... இதிலிருந்து மீண்டு வருவீர்களா?  இனப்படுகொலைக்குப் பிறகு உங்களிட மிருந்து வருத்தமான வார்த்தைகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இப்படி, வருத்தம் கலந்த வார்த்தைகள் வரும் என்பதை நான் அறிவேன். உங்கள் வருத்தம் கலந்த வார்த்தைகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இனப்படுகொலைக்குப் பிறகு உங்கள் மன்னிப்பை நாங்கள் ஏற்க  மாட்டோம். செய்தது செய்தது தான். காசா  இனப்படுகொலையின் போது எங்கே யிருந்தீர்கள் நீங்கள் என்று உங்களைப் பார்த்து கேட்க விரும்புகிறேன்?

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லகேமில் உள்ள கிறிஸ்துமஸ் சுவிசேஷ லுத்தரன் தேவாலயத்தின் போதகர் முன்தர் ஐசக் இந்த வார்த்தைகளைக் கூறியிருக்கிறார். இவரது செய்தி உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

பெத்லகேம் நகரின் மேங்கர் சதுக்கம் பொதுவாக கிறிஸ்துமஸ் நேரத்தில் பார்வையாளர்கள்- சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். இந்தாண்டு மேங்கர் சதுக்கம் வெறிச்சோடிக்காணப்பட்டது. கிறிஸ்துமசை முன்னிட்டு அலங்கார விளக்குகள் அமைக்கப்படவில்லை. கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்படவில்லை. கிறிஸ்துமஸ் சந்தை நடைபெறவில்லை. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்களைக் காண முடியவில்லை. குழந்தைகளின் பாடல் களைக் கேட்க முடியவில்லை.  காசா மக்கள் மீது இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டன என்கிறார் பெத்லகேம் நகரில் வசிக்கும் மேடலின்.

இதற்கு நேர்மாறாக பெரிய பாறைகள் மற்றும் முட்கம்பிகளால் சூழப்பட்ட புதிதாகப் பிறந்த இயேசுவைக் காட்டும் பிறப்புக் காட்சி, காசாவின் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி மக்களை வெளி யேற்றிய போது  குறைமாதத்தில் பிறந்திருந்த பாலஸ்தீன குழந்தைகள் வெண்டிலேட்டரி லேயே விடப்பட்டு கொலையான சம்பவத்தை  நினைவுபடுத்தும் விதமாக  பெத்லகேமின் நேட்டிவிட்டி தேவாலயத்தில் வெண்டிலேட்டரில் குழந்தை ஏசு உருவம் வைக்கப்பட்டிருந்தது.

நேட்டிவிட்டி தேவாலயத்தில் பாதிரியார், ஈசா தல்ட்ஜியா, ஐசக், “நான் 12 ஆண்டுகளாக இந்த தேவாலயத்தில் பாதிரி யாராக இருக்கிறேன். நான் பெத்லகேமில் பிறந்தேன். கொரோனா தொற்றுநோய் காலத்தில் கூட இது போன்ற  கிறிஸ்துமஸை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. “எங்களுக்கு காசாவில் சகோதர சகோதரிகள் உள்ளனர். அவர்களை நினைக்கும் போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மகிழ்ச்சியாக இல்லை.  ஆனால்   நாங்கள் அனைவரும் பிரார்த்தனைகளால் ஒன்றுபட்டுள்ளோம் என்று பிபிசியிடம் தனது உணர்வைக் கொட்டினார். 

கிறிஸ்துமஸ்  மகிழ்ச்சி, அன்பு மற்றும் அமைதி ஆகியவற்றின் அடையாளம். ஆனால், எங்களுக்கு நிம்மதி இல்லை. எங்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை என நேட்டிவிட்டி தேவாலயத்தின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் ஸ்பிரிடன் சம்மோர் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

“எங்கள் கைகளில் எதுவும் இல்லை.  பிரச்சனைகளின் பால் முடிவுகளை எடுக்கும் உலகெங்கிலும் உள்ள  தலைவர் களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். உலகெங்கிலும் சமாதானம் நிலவவேண்டும். அதற்கான “வெளிச்சத்தை” அவர்களுக்குத் தாருங்கள் என கடவுளிடம் பிரார்த்திக்கிறோம் எனத் தெரிவித்தார்.

மேங்கர் சதுக்கத்தில் ஏராளமான பாலஸ்தீனப் பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்ற காட்சியை மட்டுமே காண முடிந்தது. இந்தாண்டு, கிறிஸ்துமஸ் மரம் இல்லாமல்,  விளக்குகள் இல்லாமல், இருள் மட்டுமே உள்ளது என்றார் ஆறு ஆண்டுகளாக ஜெருசலேமில் வசிக்கும் வியட்நாமைச் சேர்ந்த பிரான்சிஸ்கன் துறவி சகோதரர் ஜான்வின்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளி யிட்டுள்ள ட்விட்டர் பதிவு, “பெத்லகேமில் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்று நம்பும்  இடத்தில் வழக்கமான பண்டிகை கொண்டாட்டங்களுக்கு பதிலாக மெழு குவர்த்தி ஏந்தி பாடல்கள் பாடப்பட்டன. அமைதி வேண்டி பிரார்த்தனை நடத்தினர்” எனத் தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் அன்று அமைதி, அன்பும் செழிக்க வேண்டுமென்பதே எங்கள் செய்தியாக இருக்கும். இந்தாண்டு காசா பகுதியில் என்ன நடக்கிறது? என்ற கேள்வியை சர்வதேச சமூகத்தின் முன் எழுப்புகிறோம். சோகம், துக்கம் இது தான் இந்தாண்டு செய்தி என்கிறார் பெத்லகேமின் மேயர் ஹனா ஹனியேஹ். 

ஜெருசலேமில் உள்ள தேவாலயத் தலைவர்களும் இஸ்ரேலின் நட வடிக்கைகளுக்கு எதிராகப் பேசியுள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் உடனான சந்திப்பில், ஜெருசலேமில் உள்ள தேசபக்தர்கள், தேவா லயங்களின் தலைவர்கள் மீண்டும் ஒருமுறை உடனடியாக போர்நிறுத்தத் திற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக வாட்டிகன் செய்திகள் தெரிவிக்கின்றன . 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தலைவர்களின் கூட்டம் “வெறும் விடுமுறைக் கால இன்பப் பரிமாற்றம் அல்ல”. உலகளாவிய திருச்சபை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதை நோக்க மாகக் கொண்டது, உலகளாவிய கிறிஸ்த வர்கள் சார்பாக காசாவில் இரத்தக்களறியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தலைவர்களின் கூட்டம் “வெறும் விடுமுறைக் கால இன்பப் பரிமாற்றம் அல்ல”. உலகளாவிய திருச்சபை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதை நோக்க மாகக் கொண்டது, உலகளாவிய கிறிஸ்த வர்கள் சார்பாக காசாவில் இரத்தக்களறியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி: தி இந்து