world

img

சோமாலியா: தற்கொலை படை தாக்குதலில் சிக்கி 7 பேர் பலி

சோமாலியாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசூவில் விமானம் நிலையம் அருகில் உள்ள தனியார் உணவு விடுதியில் வெள்ளியன்று அடையாளம் தெரியாத நபர் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 
இந்நிலையில் தற்கொலைப்படை தாக்குதல் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;