நைல் நதிக்கு மேல் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது நடுவானில் பிரசவம் பார்த்த அனுபவத்தை மருத்துவர் ஆயிஷா நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார்.
கத்தாரிலிருந்து உகாண்டாவிற்கு காத்தார் ஏர்வேஸ் விமானம் நைல் நதிக்கு மேல் 35 அடி உயரத்தில் பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது இங்கு யாராவது மருத்துவர்கள் இருக்கிறீர்களா என்று இண்டர் காம் மூலம் விமானப் பணிப்பெண்கள் கேட்டனர். உடனே அந்த விமானத்தில் டொரான்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் மருத்துவர் ஆயிஷா கதீப் கையை உயர்த்தி நான் இருக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் விமானத்தில் பயணிக்கும் யாரோ ஒருவருக்குப் பிரச்சனை போலும் என்று எண்ணி எழுந்து சென்று போய் பார்த்திருக்கிறார்.
அப்போது ஒரு பெண்ணை சுற்றி கூட்டமாகப் பலரும் நின்று கொண்டு இருந்திருக்கின்றனர். அந்த பெண்ணிற்கு மாரடைப்பு போன்ற பிரச்சனை இருக்குமோ என்று நபர்களை விலக்கி விட்டு அருகில் சென்று பார்த்த போது, அந்த பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருப்பதையும், குழந்தை வெளியே வந்து கொண்டிருப்பதையும் கவனித்திருக்கிறார். அப்போது விமானத்திலிருந்த இரு மருத்துவ ஊழியர்களையும் உதவிக்கு வைத்துக் கொண்டு அந்த பெண்ணிற்கு மருத்துவர் ஆயிஷா பிரசவம் பார்த்திருக்கிறார்.
அப்போது அந்த பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பின்னர் குழந்தையைச் சோதித்துப் பார்த்ததில் குழந்தை நலமாகவும், தாயும் நலமாக இருந்திருக்கின்றனர். உடனே சந்தோஷமாக மருத்துவர் ஆயிஷா அந்த பிரசவித்த பெண்ணை பார்த்து உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. நலமாக இருக்கிறார் எனக் கூறி வாழ்த்து சொல்லியிருக்கிறார். அப்போது விமானத்திலிருந்த அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்திருக்கின்றனர்.
அப்போதுதான் அந்த தாய் தான் விமானத்திலிருப்பதை உணர்ந்திருக்கிறார். உடனே அந்த தாய் மருத்துவரின் பெயரைக் கேட்டு விட்டு, தனது குழந்தைக்கு மிராக்கிள் ஆயிஷா எனப் பெயர் சூட்டியிருக்கிறார். உடனே மருத்துவர் ஆயிஷா தான் அணிந்திருந்த தங்க சங்கிலியை எடுத்து அந்த குழந்தைக்கு அணிவித்துள்ளார். அந்த சங்கிலியில் அரபு மொழியில் ஆயிஷா என எழுதியிருந்தது. இந்த நிகழ்வு விமானத்திலிருந்த அனைவரையும் சந்தோஷத்தில் மூழ்கடித்தது. இந்த சம்பவம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள மருத்துவர் ஆயிஷா இந்த நிகழ்வு கடந்தமாதம் நடந்திருந்தாலும், பல்வேறு வேலை காரணமாகப் பதிவிடமுடியவில்லை. தற்போது பதிவிட்டுள்ளேன் மிகவும் மகிழ்யான தருணங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ட்விட் உலக அளவில் தற்போது செய்தியாகவும் வைரலாகவும் மாறியிருக்கிறது.